அமைச்சர் பி மூர்த்தி

 
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஜன.17 முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் பி.மூர்த்தி

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: வரும் 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் பி மூர்த்தி உறுதியளித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா அலங்காநல்லூரில் நடைபெற்றது. இவ்விழாவினை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களுடைய பாரம்பரியமான உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் அனைத்துக் கட்சியினுடைய முக்கியப் பிரமுகர்களும் இதிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள். பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு டிராக்டர்: வழக்கமாக சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வந்தது தற்போது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளின் படி டிராக்டர் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியினுடைய ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் நடைபெறும். பார்வையாளர்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். டிஜிட்டல் ஸ்கிரீனில் ஸ்கோர் போர்டு வைக்கப்படும்.

போட்டிகள் அனைத்தும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் நடக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் விழா கமிட்டியினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT