மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி பகுதியில் நடைபெறும் இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி.

 
தமிழகம்

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு: முதல்வர் வருகையையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு முதல்​வர் விஜய் நாளை (1-ம் தேதி) தண்​ணீர் திறந்து வைக்க உள்ள நிலை​யில், அணை மற்​றும் மேட்​டூர் நகரப் பகு​தி​களில் முன்​னேற்​பாடு மற்​றும் பாது​காப்​புப் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

முதல்​வர் விஜய் சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்​து, அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக மேட்​டூர் அணைக்கு செல்​கிறார். தொடர்ந்​து, அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீரைத் திறந்து வைக்​கிறார். இதையொட்​டி, அணை​யில் நிகழ்ச்சி நடை​பெறும் இடத்​தில் மேடை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் வரும் வழிகளில் பொது​மக்​கள் அதி​கள​வில் கூடு​வார்​கள் என்​ப​தால், முக்​கியச் சந்​திப்​பு​கள், மக்​கள் கூடும் இடங்​கள் மற்​றும் மேட்​டூர் நகரப் பகு​தி​களில் இரும்​புத் தடுப்​புக் கம்​பிகள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மேலும், மாவட்ட நிர்​வாகம் சார்​பில் முதல்​வருக்கு வரவேற்பு அளிக்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

முதல்​வர் வரு​கை​யையொட்டி போக்​கு​வரத்து மாற்​றங்​கள், வாகன நிறுத்​து​மிடங்​கள், காவல் கட்​டுப்​பாட்டு மையம் உள்​ளிட்ட பாது​காப்பு ஏற்​பாடு​களை​யும் போலீ​ஸார் மேற்​கொண்டு வரு​கின்​றனர். ஏடிஜிபி தலை​மை​யில் ஐஜி, டிஐஜி, எஸ்​பிக்​கள் உள்​ளிட்ட 3,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​கின்​றனர்.

நீர்​வரத்து அதி​கரிப்பு: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து நேற்று காலை விநாடிக்கு 6,887 கனஅடி​யாக இருந்த நிலை​யில், மாலை 9,035 கனஅடி​யாக அதி​கரித்​தது குடிநீருக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் வெளியேற்​றப்பட்டு வருகிறது. அணையின் நீர்​மட்​டம் 90.47 அடி​யாக​வும், நீர்இருப்பு 53.19 டிஎம்சி​யாக​வும் இருந்​தது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 6,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று 10,000 கனஅடி​யாக அதி​கரித்​தது.

SCROLL FOR NEXT