ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாவதை தடுப்பதற்காக விசிக விமர்சிக்கப்படுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on
2 min read

சென்னை: ஒடுக்​கப்​பட்ட மக்​கள் அரசி​யல் சக்​தி​யாக பரிணமிக்​க கூ​டாது என்​ப​தற்​காக அமைச்​சர​வை​யில் விசிக இடம் பெற்​றது விமர்​சிக்​கப்​படு​வ​தாக திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் விசிக சார்​பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளி​யீட்டு விழா நடை​பெற்​றது. விசிக தலை​வர் திரு​மாவளவன் மாநாட்டு மலரை வெளி​யிட கவிஞர் காசி ஆனந்​தன் பெற்​றுக்​கொண்​டார். இந்த விழா​வில் இசை கச்​சேரி, நடன நிகழ்ச்​சி, கவியரங்​கம் என கோலாகல​மாக நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சி​யில் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: உளுந்​தூர்​பேட்டை மாநாட்​டில் 234 தொகுதி மாவட்ட செய​லா​ளர்​களும் 39 தொகு​தி​களுக்​கும் நியமனம் செய்​யப்​பட்ட மண்டல பொறுப்​பாளர்​களும் மாநில பொறுப்​பாளர்​களும் ஒரே மேடை​யில் அமர வேண்​டும் என்று நான் ஆசைப்​பட்​டேன், அதை நடை​முறைப்​படுத்​தி​ய​தில் பிழை ஏற்​பட்​டது. 400 இருக்​கைகள் போடப்​பட்ட நிலை​யில் ஒவ்​வொரு​வரோடும் கூடு​தலாக சிலர் மேடை ஏறிய​தில் நெரிசல் ஏற்​பட்​டது. இளம் சிறுத்​தைகள் எல்லா தடுப்​பு​களை​யும் தாண்டி என்​னோடு செல்பி எடுக்க முண்​டியடித்​த​தால் இந்த நிலை ஏற்​பட்​டது.

இது நடை​முறை சிக்​கல் தானே தவிர நம்மை பிடிக்​காதவர்​கள் விமர்​சிப்​ப​தைப் போல ஒழுங்​கீனம் இல்​லை. விடு​தலை சிறுத்​தைகள் கட்​சியினரை ஒழுங்​கீன​மானவர்​கள் என்று சித்​தரிக்க முயற்​சிக்​கிறார்​கள். இந்த இயக்​கம் வலிமை பெற்று விடக்​கூ​டாது என்​ப​தற்​காக உளவியல் தாக்​குதலை நிகழ்த்​துகிறார்​கள்.

முதல்​வர் விஜ​ய்யின் அரசி​யல் வரு​கைக்கு பிறகு எத்​தகைய அரசி​யல் மாற்​றங்​கள் நிகழ்ந்​திருக்​கின்றன என்​பதை அரசி​யல் களத்​தில் நாள்​தோறும் ஈடு​படக்​கூடிய அத்​தனை பேரும் நன்கு அறிவர். நீண்ட நெடிய பாரம்​பரி​யம், கட்​டமைமைப்பு உள்ள பெரிய கட்​சிகளே தனது நெடு​நாள் வாக்கு வங்​கியை இழந்து நிற்​கின்​றன. அதை பற்றி எல்​லாம் பேசாதவர்​கள் ஆளும் கட்​சி​யாகவோ, எதிர்​கட்​சி​யாகவோ இல்​லாத ஒரு கட்​சி, நாங்​கள் தான் அடுத்து ஆளப்​போகிறோம் என்று உரிமை கோராத விசிகவை குறிவைக்​கின்​றன.

கூடாரம் காலி, திரு​மாவளவனோடு இருந்​தவர்கள் எல்​லாம் வெளி​யேறி போய்​விட்​டார்​கள் என்று கூறிய​வர்​களின் கன்​னங்​களில் ஓங்கி அறைவது போல் விசிக​வினர் லட்​சக்​கணக்​கிலே திரண்டு வந்​தார்​கள். மாநாடு முடிந்த பின் முதல்​வர் விஜய் என்​னிடம் தொலைபேசி​யில் பேசி​னார். அவர் சொன்​னார், ‘சார் மிரட்​டிட்​டீங்​க... ஃபயர் சார்’ என கூறி​னார்.

வன்னி அரசுவை அமைச்​சர​வை​யிலே இடம்​பெற செய்​ததை அவர்​களால் தாங்கிக் கொள்ள முடிய​வில்​லை. விசிக அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றதை அவர்​களால் பொறுத்து கொள்ள முடிய​வில்​லை. இதன் மூலம் விசிக என்ற இயக்​க​மும், அதன் தலை​மை​யை​யும் மேலும் வலிமைபெறும். அதன் மூலம் ஒடுக்​கப்​பட்ட மக்​கள் அரசி​யல் சக்​தி​யாக பரிணா​மம் பெறு​வார்​கள். இதை தடுத்​தாக வேண்​டும் என்​பது​தான் அவர்​களின் நோக்​கம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வின் போது தமிழக சமூக நீதித்​துறை அமைச்​சரும், விசிக துணைப் பொதுச்​செய​லா​ளர் வன்னி அரசு, விசிக பொதுச்​செய​லா​ளர்​கள் து.ரவி​க்கு​மார், ம.சிந்​தனைச்​செல்​வன், விசிக பொருளாளர் எஸ்​.எஸ்​.​பாலாஜி, காட்​டுமன்​னார்​கோ​வில் எம்​எல்ஏ இ.ஜோ​தி​மணி, இயக்​குநர் ரா.​பார்த்​திபன், தொழிலா​ளர் விடு​தலை முன்​னணி மாநில நிதி செய​லா​ளர் ச.செந்​தில்​கு​மார், விசிக தலைமை நிலைய செயலா​ளர் தகடூர் தமிழ்​செல்​வன்​, மா.வீரக்​கு​மார்​ மற்​றும்​ விசிக நிர்​வாகி​கள்​ உடன்​ இருந்​தனர்​.

<div class="paragraphs"><p>திருமாவளவன்</p></div>
“தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது” - எடப்பாடி பழனிசாமி ஆரூடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in