எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.

 
தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கு, 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் 641 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

தமி​ழ​கத்​தில் அரசு மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் பல் மருத்​து​வக் கல்​லூரி​களின் இடங்​கள், தனி​யார் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீடு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்​கான இடங்​களுக்கு மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) கலந்​தாய்வு நடத்தி வரு​கிறது.

தமி​ழ​கத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் (அரசு ஒதுக்​கீடு) 7,157 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,383 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசுப் பள்ளி மாண​வர்​களுக்கு 537 எம்​பிபிஎஸ் இடங்​கள், 104 பிடிஎஸ் இடங்​கள் இருக்​கின்​றன. இவை தவிர தனி​யார் கல்​லூரி​களில் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 1,966 எம்​பிபிஎஸ், 580 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன.

இந்த படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மாண​வர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்​கி, ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. மொத்​தம் 72,633 பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தில் தகு​தி​யான மாண​வர்​களின் தரவரிசை பட்​டியலை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று வெளி​யிட்​டார். சுகா​தா​ரத் துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) வா.லோக​நாயகி, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி துணை இயக்​குநர்​கள் (தேர்​வுக் குழு) கரா​மத், பால​நாக நந்​தினி, சாந்​தினி ஆகி​யோர் உடன் இருந்​தனர்.

இந்த பட்​டியலில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு 35,926 பேர், அரசு பள்ளி மாண​வர்​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீடு இடங்​களுக்கு 3,625 பேர், நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு 26,956 பேர் இடம் பெற்​றுள்​ளனர். விழுப்​புரத்​தைச் சேர்ந்த வெங்​கடபதி வேலா​யுதம் என்ற மாண​வர் நீட் தேர்​வில் 720-க்கு 705 மதிப்​பெண்​கள் பெற்று அகில இந்​திய அளவில் 12-வது இடத்​தை​யும், தமிழக அளவில் முதலிடத்​தை​யும் பிடித்த அவர், தரவரிசை பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார்.

புதுக்​கோட்டை மாணவி வி.னிகா 700 மதிப்​பெண்​களு​டன் 2-ம் இடத்​தை​யும், விருதுநகர் மாண​வர் ஏ.எம்​.சுடர் 696 மதிப்​பெண்​களு​டன் 3-ம் இடத்​தை​யும் பிடித்​துள்​ளனர். தரவரிசை பட்​டியலில் முதல் 10 இடங்​களில் 5 மாண​வர்​கள், 5 மாணவி​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

அதே​போல், அரசு பள்ளி மாண​வர்​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீடு தரவரிசை பட்​டியலில் நாகப்​பட்​டினம் மாண​வர் எம்​.​தினேஷ் 599 மதிப்​பெண்​களு​டன் முதல் இடத்​தை​யும், சேலம் மாண​வர் பி.எஸ்​.தரனீஷ் 595 மதிப்​பெண்​களு​டன் 2-ம் இடத்​தை​யும், புதுக்​கோட்டை மாண​வர் ஆர்​.​ராஜேஷ் 595 மதிப்​பெண்​களு​டன் 3-ம் இடத்​தை​யும் பிடித்​துள்​ளனர்.

அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான பொதுப் பிரிவு கலந்​தாய்வு ஆக.13-ம் தேதி https://tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில் தொடங்​கு​கிறது.

அதே​நாளில், சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு (மாற்​றுத் திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாகச் சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடக்​கிறது. தரவரிசை பட்​டியல் மற்​றும் கலந்​தாய்வு தொடர்​பான அனைத்து விவரங்​களை​யும் இணை​யதளத்​தைப் பார்த்து தெரிந்து கொள்​ளலாம்.

போலி ஆவணம்: இந்த ஆண்டு திருப்​பூர், திரு​வள்​ளுர் மற்​றும் நாமக்​கல் ஆகிய 3 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் தலா 50 கூடு​தல் எம்​பிபிஎஸ் இடங்​கள் கிடைத்​துள்​ளன. தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் மொத்​தம் 700 இடங்​கள் கூடு​தலாகக் கிடைத்​துள்​ளன. கடந்த ஆண்டை விட 200 பிடிஎஸ் இடங்​கள் குறைந்​துள்​ளன. மருத்​து​வப் படிப்​பில் சேரு​வதற்​காகக் கடந்த 2024-ம் ஆண்​டில் 9 பேரும், 2025-ம் ஆண்​டில் 25 பேரும், இந்த ஆண்​டில் 5 பேரும் போலி ஆவணங்​கள் மூலம் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஒரு மாண​வர் நீட் தேர்​வில் தான் எடுத்த 170 மதிப்​பெண்​ணை, 552 ஆக திருத்​தி​யுள்​ளார். என்​ஆர்ஐ பிரி​வில் 512 மாண​வர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். அவர்​களின் தூதரக சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

நீட் தேர்வு ஏழை மாண​வர்​களுக்​கும், நமது கொள்​கை​களுக்​கும் எதி​ரானது. தொடர்ந்து சட்​டப் போராட்​டம் நடத்​து​வோம். அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலித்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும். ஒரு கல்​லூரி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​திருப்​பது உறு​தி​யாகி உள்​ள​தால், அந்த விவ​காரம் அடுத்​தக்​கட்​டத்​துக்​குச் சென்​றுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் அருண்​ராஜ் தெரிவித்​தார்​. இந்​நிகழ்ச்​சி​யில் துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான தரவரிசைப் பட்​டியலை​யும் அமைச்​சர் அருண்​ராஜ் வெளி​யிட்​டார்​.

SCROLL FOR NEXT