தமிழகம்

அரசு சார்பில் செம்மொழி இலக்கிய விருது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், ஒடி​சா, வங்​காளம், மராட்​டி​யம் ஆகிய செம்​மொழிகளில் ஒவ்​வொரு ஆண்​டும் சிறந்த படைப்​பு​களுக்கு தனித்​தனி​யாக விருதுகள் வழங்​கப்​படும் என்று தமிழக அரசு அறி​வித்​திருப்​பது பொருத்​த​மானது.

இந்த விருதுகளை தேர்வு செய்ய சுயேச்சை தன்மை கொண்ட குழுக்​கள் அமைக்​கப்​படும் என்​றும் முதல்​வர் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா​வின் பன்​முகத்​தன்​மையை உயர்த்​திப் பிடிக்​கும் வகை​யிலும், பல்​வேறு மொழிகளில் எழுதப்​படும் இலக்​கி​யங்​களை அங்​கீகரிக்​கும் வகை​யிலும் தமிழக அரசு எடுத்​துள்ள முடிவு சிறப்​பானது.

அனைத்து மொழிகளை​யும் சமமாக நடத்​து​வதும், அங்​கீகரிப்​பதுமே இந்​திய ஒரு​மைப்​பாட்டை வலிமைப்​படுத்​தும். இதை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT