தமிழகம்

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் தனி நீதிப​தி​யின் அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்​து, நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்த வேண்​டியது அரசின் கடமை என்று உத்​தர​விட்​டது.

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற உத்​தரவை செயல்​படுத்​தாத​தால், மாவட்ட ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், மனு​தா​ரர்​கள் மற்​றும் 10 பேர் சிஐஎஸ்​எப் வீரர்​கள் பாது​காப்​புடன் தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​மாறும், நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றியது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறும் உத்​தர​விட்​டார். ஆனால், தீபம் ஏற்ற போலீ​ஸார் அனு​மதி மறுத்​தனர்.

இந்​நிலை​யில், தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கக்கோரி ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர்தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு மற்​றும் மனு​தா​ரர்​கள் தரப்​பில் பல்​வேறு வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

அரசுத் தரப்​பில், "நீ​தி​மன்ற பாது​காப்​புப் பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள சிஐஎஸ்​எப் வீரர்​களை மனு​தா​ரர்​கள் பாது​காப்​புக்கு அனுப்​பியது சட்​ட​விரோத​மாகும். காலஅவகாசம் இருந்த போதி​லும், இந்த மனுவை தனிநீதிபதி அவசர​மாக ஏற்​றுக் கொண்​டுள்​ளார். நீதிப​தி​யின் உத்​தர​வால் கலவரம் ஏற்​படும் சூழல் உரு​வாகி, 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது" என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போல, தர்கா தரப்​பிலும் வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​து​வது அரசு இயந்​திரத்​தின், அரசி​யலமைப்​புக் கடமை​யாகும். ஆனால், தனி நீதிப​தி​யின் உத்​தரவை அமல்​படுத்​த​வில்​லை. மாற்று நிவாரணத்​தைக்​கூட பின்​பற்​ற​வில்லை. மனு​தா​ரர் மற்​றும் 10 பேர் தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டும்என்று உத்​தரவு பிறப்​பித்த நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில்144 தடை உத்​தரவை எப்​படி பிறப்​பிக்க முடி​யும்? நீதி​மன்ற உத்​தரவை நிர்​வாக உத்​தரவு கட்​டுப்​படுத்​து​மா?

வழக்​கின் நிகழ்​வு​களைப் பார்க்​கும்​போது, மேல்​முறை​யீட்​டாளர்​கள் தங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்ற அச்​சத்​தில் நீதி​மன்​றத்தை நாடி​யுள்​ளனர் என்று தெரி​கிறது. இது நன்கு வடிவ​மைக்​கப்​பட்ட செய​லாகும். தனி நீதிபதி உத்​தரவை அதி​காரி​கள் வேண்​டுமென்றே பின்​பற்​ற​வில்​லையா என்​பதை சோதிக்க வேண்​டும். மேல்​முறை​யீட்​டில் அதி​காரி​களின் நடத்தை குறித்து அவசர​மாக முடிவுக்கு வர முடி​யாது.

நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்த வேண்​டாம் என்று அதி​காரி​கள் முடிவு செய்​திருப்​பதை கண்​டறிந்த தனி நீதிப​தி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்​எப் உதவியை கோரி​யுள்​ளார். மாநில காவல் துறை​யால் அரசி​யலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது. தேவைப்​பட்​டால் நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்​திய படை​யின் உதவியைப் பெறு​வ​தில் சட்​ட​விரோத​ம் இல்​லை.

மேலும், நீதி​மன்​றத்​தின் முதல் உத்​தர​வில், நீதி​மன்​றத் தீர்ப்பை நிறைவேற்​றும் பொறுப்பு கோயில் செயல் அலு​வலரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் அந்​தப் பொறுப்பை நிறைவேற்​றாததால், மனு​தா​ரர்​களிடம் அந்​தப் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த மனு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை முன்​கூட்​டியே தடுக்​கும் மறை​முக நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT