இந்​திய கம்​யூனிஸ்ட் நூற்​றாண்டு நிறைவு விழா, மூத்த தலை​வர் ஆர்​.நல்​லக்​கண்​ணு​வின் 101-வது பிறந்​த​நாள் விழா, அமீர் அதைர்​கான், கே.டி.கே.தங்​கமணி நினைவு தினம் ஆகிய நிகழ்​வு​கள், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தலைமை அலு​வல​க​மான பாலன் நினை​வகத்​தில் நேற்று நடை​பெற்​றன. மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மூத்த தலை​வர்​கள் இரா.​முத்​தரசன், கே.சுப்​ப​ராயன், ஜி.பழனி​சாமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். | படம்: எஸ்​.சத்​தி​யசீலன்​ |

 
தமிழகம்

யார் எத்தகைய வியூகம் அமைத்தாலும் பாஜக கூட்டணியை தமிழகம் தோற்கடிக்கும்: மு.வீரபாண்டியன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா மற்​றும் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணுவின் 101-வது பிறந்​த ​நாள் விழா கட்​சி​யின் தலைமை அலு​வல​க​மான பாலன் இல்​லத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இத்​துடன் கட்​சியை தமிழகத்​தில் தோற்​று​விப்​ப​தில் முக்​கிய பங்​கு​வகித்த அமீர் ஹைதர்​கான் மற்​றும் தொழிற்​சங்​கத் தலை​வர் கே.டி.கே.தங்​கமணி ஆகியோரின் நினைவு நாளை​யொட்டி நினை​வேந்​தல் நிகழ்ச்​சி​யும் நடத்தப்பட்டது.

இந்​நிகழ்​வு​களுக்கு கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலைமை வகித்தார். முன்​னாள் மாநில செய​லா​ளர் முத்​தரசன் கொடி ஏற்றி வைத்​தார். செந்​தொண்​டர் அணிவகுப்பு நடந்​தது.

பின்​னர் சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களை சேர்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் 80 பேரை மாநில செயற்​குழு உறுப்​பினர் வகிதா நிஜாம், மு.வீர​பாண்​டியன் கவுர​வித்​தனர். அப்​போது கே.சுப்​ப​ராயன் எம்​.பி. உள்​ளிட்​டோர் பேசினர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மு.வீர​பாண்​டியன் கூறும்​போது, “இந்​தி​யா​விலே தமிழகம்தான் நல்​லிணக்க பூமி. இங்கு பெரும்​பான்​மை​யான இந்து மக்​கள்​தான், சிறு​பான்​மை​யினரின் அரணாக நிற்​கின்​றனர். இந்த ஒற்​றுமையை சிதைக்​கும் பாஜகவும், அதன் கூட்​டணிக் கட்​சிகளும் எத்​தகைய வியூ​கங்​களை வகுத்​தா​லும், அவர்​களை தமிழகம் தோற்​கடிக்​கும்” என்​றார்.

SCROLL FOR NEXT