அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு

அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு
Updated on
1 min read

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ-வுமான சுதர்சனத்தின் வீட்டுக்குள் கடந்த 2005-ம் ஆண்டு புகுந்த பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, வீட்டில் இருந்த 62 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வழக்கில் பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக பெரியபாளையம் போலீஸார் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு
புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை எதிர்த்து வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in