வாயு கசிவு நடந்த இடத்தில் பாதுகாப்புக் கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்

 
தமிழகம்

அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அருகே தனி​யார் கடல் உணவு பதப்​படுத்​தும் தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட அமோனியா வாயு கசி​வால் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர். 60-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்​டு, மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, ஆளுநர் அர்​லேகர் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வி்த்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்ட சமூக வலைதள பதிவில், ‘திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்​தில் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டிருப்​பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்​தேன். தங்​களின் அன்​பிற்​குரிய​வர்​களை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர்: விலைம​திப்​பற்ற உயிர்​கள் பறி​போனதும், பல தொழிலா​ளர்​கள் காயமடைந்​ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்​கிறது. மேலும், சிகிச்​சை​யில் உள்ள அனை​வரும் விரை​வில் குணமடைந்து முழு உடல்​நலம் பெற​வும் பிரார்த்​திக்​கிறேன்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல். இது​போன்ற துயரச் சம்​பவங்​கள், இனி​யும் ஏற்​ப​டா​மல் இருக்க, தொழிற்​சாலைகளில் உரிய பாது​காப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என்று ஆய்​வு​களை நடத்த வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: வாயுக் கசி​வால் பாதிக்​கப்​பட்ட பலர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் நிலை​யில், அவர்​களை காக்க உரிய மருத்​துவ சிகிச்​சைகள் அளிப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை: நச்சு வாயுவை சுவாசித்து பரி​தாப​மாக உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கடந்த சில காலங்​களாகவே தொழில் நடக்​கும் பகு​தி​களில் இது​போன்ற அசம்​பா​விதங்​கள் தொடர்​வதும் அதனால் உயிர்​பலிகள் உண்​டாவதும் அச்​சத்தை ஏற்​படுத்​துகின்​றன.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்து உள்​ளனர்.

SCROLL FOR NEXT