தமிழகம்

கணவனை இழந்த பெண்ணுக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை: தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: கணவனை இழந்த பெண்​ணுக்கு தவெக நிர்​வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்​பவத்​துக்கு தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

ஆலந்​தூர் வடக்கு பகுதி தவெக செய​லா​ளர் வேம்​புலி என்​பவர், கணவனை இழந்து தனியே வசிக்​கும் பெண்​ணின் வீடு புகுந்​து, பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யானது. இது தொடர்​பாக வேம்​புலி மீது போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​துள்​ளனர். இந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கணவனை இழந்த பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்து தவெக நிர்​வாகி பாலியல் தொல்லை கொடுத்​த​தாக வெளிவந்​துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்​கிறது.

ஒரு​புறம் ஆளுங்​கட்சி திமிரில், பெண்​கள் பாது​காப்பை தவெகவினர் காவு வாங்கி வரு​கின்​றனர். மறு​புறம், அதி​கார மமதை​யில், ஸ்ரீவை​குண்​டம் தவெக எம்​எல்ஏ சரவணன் போன்​றோர் பாதிக்​கப்​பட்ட பெண்​களிடம் பேரம் பேசுகின்​றனர்.

இப்​படி ஒட்​டுமொத்​த​மாக பெண்​கள் பாது​காப்பை சீரழிக்​கும் கும்​பலை கைகுள்​ளேயே வைத்​துக்​கொண்​டு, பெண்​களின் பாது​காப்பை உறுதி செய்​வோம் என்று கூற தங்​களுக்கு வாய் கூச ​வில்​லை​யா?

அண்​ணா​மலை: பெண்​களின் பாது​காப்பு குறித்து தவெக தலை​வர் முதல்​வர் விஜய் கூறிவரும் வாக்​குறு​தி​களுக்கு நேர்​மாறாக உண்மை நிலை இருப்​பது, மிகுந்த ஏமாற்​றம் அளிக்​கிறது.

திமுக ஆட்​சி​யில் நடை​பெற்ற பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள், தற்​போதைய ஆட்​சி​யிலும் குறைய​வில்​லை. இது​போன்ற கடுமை​யான குற்​றங்​களில் ஈடு​படும் தைரி​யம், இவர்​களுக்கு எங்​கிருந்து வரு​கிறது? சமூக விரோதச் செயல்​பாடு​களுக்​கு, அரசி​யல் அடை​யாளம் பாது​காப்​பாக இருக்​கக்​கூ​டாது என்​பதை முதல்​வர் உறுதி செய்ய வேண்​டும். குற்​ற​வாளி மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்​டும்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: கடந்த சில நாட்​களுக்கு முன்பு சிங்​கப் பெண் சிறப்பு அதிரடிப்​படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்​றும் சமூக ஒழுக்​கம் குறித்து மேடை​யில் பாடமெடுத்த முதல்​வர் விஜய், தனது கட்சி நிர்​வாகி​களுக்கு எப்​போது தனிமனித ஒழுக்​கத்தை சொல்​லித் தரு​வார்? அவர்​களிடம் இருந்து எப்​படி பெண்​களை பாது​காக்​கப் போகிறார்? என்ற கேள்​வி அனை​வரின்​ மத்​தி​யிலும்​ எழுந்​துள்​ளது.

SCROLL FOR NEXT