தமிழகம்

100 நாள் வேலை சட்ட திருத்தம் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? - முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: நூறு நாள் வேலை சட்​டத் திருத்​தம் குறித்து விவா​திக்​கத் தயாரா என முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கு, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் சவால் விடுத்​துள்​ளார். சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள தூர்​தர்​ஷன் தமிழ் தொலைக்​காட்சி அலு​வல​கத்​தில் மத்​திய அரசின் பாரத் 2026 நாள்​காட்​டி​யின் தமிழ் பதிப்பை மத்​திய தகவல் ஒளிபரப்​புத் துறை இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று வெளி​யிட்​டார்.

இது​வரை ஆங்​கிலம் மற்​றும் ஹிந்தி மொழிகளில் மட்​டுமே நாள்​காட்டி வெளி​யிடப்பட நிலை​யில், இந்த ஆண்டு முதல்​முறை​யாக தமிழ் உட்பட 13 பிராந்​திய மொழிகளில் நாள்​காட்டி வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

நிகழ்ச்​சிக்​குப் பின்​னர் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாரத் 2026 தமிழ் நாள்​காட்​டியை வெளி​யிட்​டது மகிழ்ச்சி அளிக்​கிறது. கடந்த நாடாளு​மன்ற கூட்​டத் ​தொடரில் வரலாற்று சிறப்​புமிக்க சட்​ட​மான `விக்​சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்​கார் அஜீவிகா மிஷன் கிராமின்' நிறைவேற்​றப்​பட்​டது.

10 மணி நேர விவாதம்: நாடாளு​மன்​றத்​தில் மக்​களவை, மாநிலங்​களவை​யில் 10 மணி நேரத்​துக்கு மேல் விவாதம் நடை​பெற்​றது. இந்த சட்​டம் பெரும்​பான்​மையோடு நிறைவேற்​றப்​பட்​டது. திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும் விவாதத்​தில் பேசி​னார்​கள். இந்த சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது அவர்​களுக்​கும் தெரி​யும். ஆனால், 100 நாள் வேலை திட்​டத்தை மத்​திய அரசு பறித்து விட்​ட​தாக போலி பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு உள்​ளனர்.

பணி நாட்​கள் 100 நாட்​களாக இருந்​ததை 125 நாட்​கள் உயர்த்​திக் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. வெளிப்​படைத் தன்​மையோடு இருக்க வேண்​டும் என்​ப​தால், ஊராட்​சித் தலை​வரின் தலை​யீடு இல்​லாமல், பயனாளர்​களை கிராம சபை கூட்​டங்​கள் மூல​மாக தேர்வு செய்ய வேண்​டும். ஒரு வாரத்​துக்​குள் ஊதி​யம் வழங்க வேண்​டும் என்று முறை​கேடு​கள் செய்ய முடி​யாத அளவுக்கு மாற்​றங்​கள் கொண்டு வரப்​பட்​டன.

இந்த திட்​டத்​தில் தமிழகத்​தில் பல முறை​கேடு​கள் நடந்​துள்​ளன. மதுரை, விருதுநகரில் இருந்த போலி பயனாளர்​களை எங்​கள் கட்​சி​யினர் கண்​டு​பிடித்து நீக்​கி​யுள்​ளனர். மக்களை ஏமாற்ற மீண்டும் குழு ஆனால், தற்​போது தேர்​தலுக்​காக இந்த திட்​டத்தை நீக்கி விட்​ட​தாக திமுக மக்​களிடம் போலி பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த சட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பை பறித்​துள்​ளது குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் என்​னுடன் விவா​திக்​கத் தயா​ரா? 100 நாட்​களை 150 நாட்​களாக உயர்த்​து​வோம் என தேர்​தல் வாக்​குறுதி அளித்​து​விட்​டு, அதற்​காக எதை​யும் செய்​யாமல், பொய்​யான வாக்​குறு​தி​களை வழங்​கி​விட்​டு, மக்​களை ஏமாற்ற மீண்​டும் குழு அமைத்​துள்​ளனர்.

வெளி மாநிலங்​களில் இருந்து தமிழகத்​துக்கு போதைப்​பொருட்​கள் கடத்​தப்​படு​வதை மத்​திய அரசு தடுக்க வேண்​டும் என்று முதல்​வர் கூறுகிறார். மாநிலத்​தின் சட்​டம்​-ஒழுங்கு பாது​காப்பு முதல்​வர் வசம்​தான் உள்​ளது. இந்த விவ​காரத்​தில் முதல்​வர்​ தனது தோல்​வியை ஒப்​புக்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT