மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

பட்டினப்பாக்கம் தலைமை செயலகத்தை கைவிட வேண்டும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வேலூர்: பட்​டினப்​பாக்​கம் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பறிக்​கும் புதிய தலைமைச் செயல​கம் கட்​டும் திட்​டத்தை தமிழக அரசு கைவிட வேண்​டும் என மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் சார்​பில் ஏழை, எளிய மாணவ, மாணவி​களுக்கு உயர்​கல்வி உதவித்​தொகை வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. இவ்​விழா​வில் பங்​கேற்ற பின் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சென்னை பட்​டினப்பாக்​கத்​தில் புதிய சட்​டப்​பேர​வை,தலை​மைச் செயலக வளாகம் அமைக்​கப்​பட்​டால், அங்​கு தலை​முறை தலை​முறை​யாக வசித்து வரும் பத்​தா​யிரத்​துக்​கும் மேற்​பட்ட பூர்​வீக மீனவக் குடும்​பங்​கள் கடுமையாக பாதிக்​கப்​படு​வார்​கள்.

சட்​டப்​பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்​கப்​பட்டு ரூ.1,200 கோடி மதிப்​பில் புதிய கட்​டிடம் கட்​டு​வதற்​காக 25.55 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​து​வது தொடர்​பாக அரசுச் செயல​ரால் அரசாணை ஏற்​கெனவே வெளி​யிடப்​பட்​டு​விட்​டது. ஆனால், ஆய்வு தான் நடை​பெறுகிறது. இன்​னும் அரசாணை வெளி​யிடப்​பட​வில்லை என அமைச்​சர்​கள் கூறு​வது மக்​களை ஏமாற்​றும் செய​லாகும். மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பறிக்​கும் பட்​டினப்​பாக்​கம் திட்​டத்தை தமிழகஅரசு உடனடி​யாக கைவிட வேண்​டும்.

தமிழகத்​தில் சுகா​தா​ரச் சீர்​கேடு காரண​மாக டெங்கு காய்ச்​சல் தீவிர​மாகப் பரவி வரு​கிறது. இது​வரை 16,830 பேர் பாதிக்​கப்​பட்​டு, சுமார் 10 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் மின் பற்​றாக்​குறை, சட்​டம்​-ஒழுங்கு சீர்​கேடும் அதி​கரித்​துள்​ளது. இவற்​றைக் கட்​டுப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்த வேண்​டிய அமைச்​சர்​கள், தேவை​யில்​லாமல் திணிக்​கப்​பட்ட இடைத்​தேர்​தல் பணி​களில் முகாமிட்​டுள்​ளனர். மத்​திய அரசின் திட்​டங்​களுக்​கான நிதி​யைப் பெறு​வதற்கு சில வரை​முறை​களும் நிபந்​தனை​களும் உள்​ளன.

நவோத​யா,கேந்​திரிய வித்​தி​யாலயா போன்ற மத்​திய அரசுப் பள்​ளி​கள் மூல​மாக ஏழை, பிற்​படுத்​தப்​பட்ட மற்​றும் பட்​டியலினப் மாணவ, மாணவி​களுக்​குத் தரமான கல்வி கிடைக்க வேண்​டும் என்​பதே மத்​திய அரசின் முதன்​மை​யான நோக்​கம். எனவே, தேவை​யான இடத்தை ஒதுக்​கீடு செய்து தந்​தால், கேந்​திரிய வித்​தி​யாலயா பள்​ளியைக்கொண்டு வரத் தயா​ராக உள்ளோம். வேலூர் விமான நிலை​யப் பணி​கள் நிறைவடைந்​து​விட்​டன. விரை​வில் திறக்​கப்​படும். 2047 வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பாஜக அரசே தொடர்ந்து நீடிக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT