தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேகம்

அறநிலை​யத்​ துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: உல​கப்​பு​கழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் கும்​பாபிஷேக விழா, வரும் செப்​.17-ம் தேதி கோலாகல​மாக நடை​பெறும் என இந்து சமய அறநிலை​யத்​ துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார்.

சென்னை இந்து சமய அறநிலை​யத்​துறை ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் கோயில் அறங்​காவலர்​கள், ஆகம வல்​லுநர்​கள் மற்​றும் அரசு உயர் அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

          

இக்​கூட்​டத்​தில் அமைச்​சர் பேசி​யதாவது: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் கடைசி​யாக கடந்த 2009-ம் ஆண்டு ஏப்​.8-ம் தேதி கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. தற்​போது 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு, வரு​கிற செப்​.17-ம் தேதி காலை 7.45 மணி முதல் 8.10 மணிக்​குள் கும்​பாபிஷேக பெரு​விழா நடை​பெறவுள்​ளது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்ற பின், கோ​யிலைப் புதுப்​பிக்​க நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டன.

மொத்​தம் 186 வகை​யான திருப்​பணி​கள், கோயில் நிதி மற்​றும் உபய​தா​ரர் நிதி என மொத்​தம் ரூ.32.28 கோடி மதிப்​பீட்​டில் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த 2018-ல் ஏற்​பட்ட தீ விபத்​தில் சேதமடைந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க வீர​வசந்​த​ராயர் மண்​டபத்​தை, அதன் பழமை மாறாமல் மீட்க ரூ.35.30 கோடி ஒதுக்​கப்​பட்​டது. இந்த மண்​டபத்​தின் புனரமைப்​புப் பணி​கள் இம்மாத இறு​திக்​குள் நிறைவடைய உள்​ளன.

மீனாட்சி அம்​மன் கோயி​லில் ஆண்டு முழு​வதும் பல்வேறு திரு​விழாக்​களும், உற்​சவங்​களும் நடை​பெறு​வ​தால் அவற்றை நிறுத்த இயலாது. எனவே, திருப்​பணி​கள் மார்ச் மாதமே முடிவடைந்​தா​லும், கும்பாபிஷேகத்தை வரும் செப்​.17-ம் தேதி நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த ஆய்​வுக் கூட்​டத்​தில்​துறை செயலர் க.மணி​வாசன், ஆணை​யர் பி.என்​.தர் மற்​றும் அறங்​காவலர்கள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT