குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் ஆலய விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி. சந்தீஷ் மற்றும் அதிகாரிகள்.

 
தமிழகம்

ராமேசுவரத்தில் நாளை காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா: குடியரசு துணை தலைவர் பங்கேற்பு

இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​ராமேசுவரத்​தில் நாளை (டிச. 29) நடை​பெற உள்ள காசி தமிழ் சங்​கமம் நிகழ்ச்​சி​யின் நிறைவு விழா​வில் குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்​.என். ரவி ஆகியோர் பங்​கேற்க உள்​ளனர்.

இதையொட்​டி, ராமேசுவரம் பகு​தி​யி்ல் இன்​றும், நாளை​யும் ட்ரோன்​கள் பறக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. காசி தமிழ் சங்​கமம் நிறைவு விழா நாளை (செவ்​வாய்​கிழமை) ராமேசுவரம் பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள ஆலய விடுதி வளாகத்​தில் நடை​பெற உள்​ளது.

இந்​நிகழ்​வில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்​.என் ரவி, மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொள்ள உள்​ளனர்.

இந்​நிலை​யில், காசி தமிழ் சங்​கமம் நடை​பெற உள்ள ஆலய விடுதி வளாகத்தை ராம​நாத​புரம் மாவட்ட ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன், காவல் கண்​காணிப்​பாளர் சந்​தீஷ் மற்​றும் பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் ஆய்வு செய்​து, பாது​காப்பு தொடர்​பாக ஆலோ​சனை நடத்​தினர்.

பின்​னர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சந்​தீஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: குடியரசுத் துணைத் தலை​வர் சாலை மார்க்​க​மாக வரும்​போது மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்​சாலை​யில், மண்​டபம் ஹெலிபேட்​டிலிருந்து ராமேசுவரம் வரையி​லான போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்டு குடியரசுத் துணைத் தலை​வர் நிகழ்ச்​சிக்​கான மேடையை வந்​தடைந்​ததும் மீண்​டும் போக்​கு​வரத்து தொடங்​கப்​படும்.

700 போலீஸார் பாதுகாப்பு: மீண்​டும் அவர் புறப்​பட்​டுச் செல்​லும்​போது போக்​கு​வரத்து நிறுத்​தப்​படும் என்​ப​தால், பொது​மக்​கள் தங்​களது பயணங்​களை அதற்​கேற்ப திட்​ட​மிட்​டுக் கொள்ள வேண்​டும். காசி தமிழ்ச் சங்​கமம் நிறைவு விழா​வில் 5 ஆயிரம் பேர் கலந்​து​கொள்ள உள்​ளனர். இதையொட்​டி, 700 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

குடியரசுத் துணைத் தலை​வர் வரு​கை​யையொட்டி பாம்​பன், மண்​டபம், தங்​கச்​சிமடம், ராமேசுவரம் உள்​ளிட்ட பகு​தி​களில் 29, 30-ம் தேதி​களில் (இன்​றும் நாளை​யும்) ட்ரோன்​கள் பறக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தடையை மீறி ட்ரோன்​கள் பறக்க விடு​வோர் மீது வழக்​குப் பதிவு செய்​து, ட்ரோன்​கள் பறி​முதல் செய்​யப்​படும். இவ்​வாறு எஸ்.பி.சந்​தீஷ் கூறி​னார்.

SCROLL FOR NEXT