சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கருப்பையா, முதல்வர் ஜோசப் விஜய்க்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார்.

 
தமிழகம்

தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமனம்: எம்எல்ஏக்களுக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வை​யின் தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி எம்​எல்ஏ எம்​.​வி.கருப்பையா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள புதிய எம்​எல்​ஏக்​களுக்கு அவர் இன்று பதவிப் பிர​மாணம் செய்து வைக்​கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்​களைப் பிடித்த தவெக, திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக், விசிக ஆகிய கட்​சிகளின் 13 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வுடன் ஆட்சி அமைத்​துள்​ளது.

முதல்​வ​ராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்​றார். இதற்​கிடையே, புதிய சட்​டப்​பேரவை அமைந்​தால், முதலில் தற்​காலிக பேர​வைத் தலை​வர் நியமிக்​கப்​படு​வார். தேர்​தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்​பினர்​களுக்கு அவர் பதவிப் பிர​மாணம் செய்து வைப்​பார்.

அந்த வகை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி தவெக உறுப்​பினர் எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேர​வைச் செயலர் கி.சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார்.

இதையடுத்​து, ஆளுநர் மாளி​கை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக கருப்​பை​யா​வுக்கு ஆளுநர் அர்​லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். இந்​நிகழ்​வில், முதல்​வர் ஜோசப் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

சட்​டப்​பேர​வைச் செயல​கம் வெளி​யிட்ட அறி​விப்​பின்​படி, 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை 9.30 மணிக்கு நடை​பெறுகிறது. இதில், தற்​காலிக பேர​வைத் தலை​வர் முன்​னிலை​யில் முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்​கின்​றனர்.

இதையொட்​டி, அனைத்து உறுப்​பினர்​களும் தேர்​தல் வெற்​றிச் சான்​றிதழ்​களை எடுத்து வரு​மாறு பேர​வைச் செயல​கம் அறி​வுறுத்​தி​யுள்​ளது சட்​டப்​பேர​வை​யில், பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பை நிரந்தர பேர​வைத் தலை​வர்​தான் நடத்த வேண்​டும்.

எனவே, நிரந்தர பேர​வைத் தலை​வர் மற்​றும் பேரவை துணைத் தலை​வர் தேர்வு நாளை காலை 9.30 மணிக்கு சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறும். மே 13-ம் தேதிக்​குள் பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் தெரி​வித்​துள்​ள​தால், நாளையே (12-ம் தேதி) வாக்​கெடுப்பு நடத்​தப்​படலாம் என்று தலை​மைச் செயலக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

சென்னை ஆயிரம்​ விளக்கு தொகுதி தவெக உறுப்​பினர் ஜேசிடி. பிர​பாகர் பேர​வைத் தலை​வர்​ ஆவதற்​கு வாய்ப்​பு உள்​ள​தாக கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT