தமிழகம்

உடலை வாங்காமல் அரசியல் செய்வதா? - மானாமதுரை இளைஞர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி

செய்திப்பிரிவு

மதுரை: ​மா​னாமதுரை இளைஞர் மரண வழக்​கில் கோரிக்​கைகள் நிறை வேற்​றப்​பட்ட பிறகும் உடலை வாங்​காமல் அரசி​யல் செய்​வது ஏன் என உயர் நீதி​மன்​றம நீதிபதிகள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர்.

மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்​வகு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணத்​துக்கு காரண​மான போலீ​ஸாரை எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தில் கைது செய்​ய​வும், உடலுக்கு இறு​தி​மரி​யாதை செலுத்த போலீஸ் பாது​காப்பு வழங்​க​வும் கோரியிருந்தார்.

          

இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. அரசுத் தரப்​பில் கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் அஜ்மல்​கான், அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர் அன்​புநிதி ஆகியோர் வாதிடும் ​போது, ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

கொலை வழக்​காக எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை சட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் காவல்நிலைய சிசிடிவி காட்​சிகள் பாது​காக்​கப்​பட்​டுள்​ளன. நீதித்​துறை நடு​வர் 196 பிரி​வின்​கீழ் வாக்​குமூலம் பெற்​றுள்​ளார்.

இந்த விவ​காரம் தொடர்​பாகதனி நீதிபதி முன் வழக்கு தொடரப்​பட்டு தீர்ப்​புக்​காக தள்​ளிவைக்​கப்​பட்​டிருந்​தது. அந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது ஆகாஷின் பெற்​றோர் தரப்பு கோரிக்​கைகள் அனைத்​தும் நிறைவேற்​றப்​பட்​டன. இருப்​பினும் ஆகாஷின் உடலை உறவினர்கள் இன்​னும் வாங்​காமல் உள்​ளனர் எனக் கூறினர்.

மனு​தா​ரர் தரப்​பில், ஆகாஷ் மரணத்​துக்கு காரண​மான போலீ​ஸாரை கைது செய்​யாத​தால் போராட்​டம் நடத்​து​வ​தாக கூறப்​பட்​டது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்பித்த உத்தரவு: உடலைப் பெற வேண்டாம் என தடுத்​தது யார், நீதி​மன்​றத்தை தனிப்​பட்ட விருப்​பத்​துக்​குப் பயன்​படுத்​தக் கூடாது.

உடல் அழுகிப் போக வேண்​டும் என விரும்​பு​கிறீர்​களா. இது​போன்ற வழக்​கு​களை ஏற்க முடி​யாது. இறந்​தவரின் உறவினர்​கள் தெரிவித்த கோரிக்​கைகள் அனைத்​தும் ஏற்​கப்​பட்​டு, இழப்​பீடு வழங்​கப்​பட்​டும் இன்​னும் உடலைப் பெறாமல் இருப்​பது ஏன், உடலை வைத்து அரசி​யல் செய்​வது ஏற்​கத்​தக்​கது அல்ல.

தற்​போது உடலை வைத்​துப்போராடுவது பேஷ​னாக உள்​ளது. இறந்​தவர் உடலுக்கு இறுதி மரி​யாதை செய்​யப்பட வேண்​டியது அவசி​ய​மானது. அது அடிப்​படை உரிமை​யும்​கூட. இதனை இறந்​தவரின் குடும்​பத்​தினர் உறுதி செய்ய வேண்​டும். இந்த மனு விளம்​பரத்​துக்​காகத் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்வாறு உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT