தமிழகம்

“உங்கள் மகளின் நினைவு வரவில்லையா?” - வேடநத்தம் மாணவி கொலை குற்றவாளியிடம் நீதிபதி கேள்வி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: வேடநத்​தம் பள்ளி மாணவி கொலை வழக்​கில் போக்சோ நீதி​மன்ற நீதிபதி பிரீத்தா நேற்று குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்புக்கு முன்னதாக தர்ம முனீஸ்​வரனிடம் நீதிப​தி, “உங்​களை சார்ந்து உங்​கள் குடும்​பத்​தில் யாரும் உள்ளன​ரா” என்று கேட்​டார். பின்​னர், “உங்​கள் தாய் மட்​டும்​தான் உங்​களு​டன் இருக்​கிறார். உங்​கள் மனை​வி​யும், மகளும் உங்​களை பிரிந்து சென்று விட்​டனர்.

ஏற்கெனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்​காரம் செய்து கொலை செய்​து, அந்த வழக்​கில் இரட்டை ஆயுள் தண்​டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த நிலை​யில், நீங்​கள் செய்​துள்ள இந்த சம்​பம் கொடூர​மானது.

மாண​வி​யின் பிரேத பரிசோதனை அறிக்​கையை முழு​மை​யாக படித்த போது​தான் நீங்​கள் எவ்​வளவு கொடூர​மாக நடந்து கொண்​டீர்​கள் என்​பது தெரிய​வந்​தது.

உங்​கள் மகள் போன்ற ஒரு குழந்​தையை இது போன்று கொடூர​மான செயலில் ஈடு​பட்​ட​ போது உங்​கள் மகளின் நினைவு வரவில்​லை​யா, அந்த குழந்​தையை பாது​காக்க வேண்​டும் எனத் தோன்ற​வில்​லை​யா? இந்​த​கொடுர செயலுக்கு உங்​களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்​தால் அது சரி​யா​காது.

அரசு தரப்​பில் குற்​றத்​துக்கு ஏற்ப பெரிய தண்​டனை​யாக வழங்க வேண்​டும் என வாதிடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு இந்​தியா முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இருப்​பினும் உங்​களுக்கு வழங்​கப்​படும் மரண தண்​டனையை குறைப்​ப​தற்​காக, உங்​கள் தரப்​பில் ஏதாவது ஒரு காரணம் இருக்​குமா என ஆய்வு செய்ததில், எங்​களுக்கு எந்தக் காரண​மும் கிடைக்​க​வில்​லை.

உங்​களுக்கு விதிக்​கப்​படும் இந்த தண்​டனை, பெண் குழந்​தைகள், பெண்​களுக்கு எதி​ராக நடக்​கும் பாலியல் வன்​முறை​களுக்கு ஒரு பாட​மாக இருக்​கும்” என்று குறிப்​பிட்​டார். அதன்​பிறகு இரட்டை தூக்கு தண்​டனை அறி​வித்​தார்.

வழக்கு கடந்​து​வந்த பாதை

மாணவி கொலை செய்​யப்​பட்​டதை கண்​டித்து கடந்த மார்ச் 12-ம் தேதி கிராம மக்​கள் 12 மணி நேர மறியலில் ஈடு​பட்​டனர். புகாரை பெறாமல் அலட்சியமாக செயல்பட்ட விளாத்திகுளம் மகளிர் காவல் நிலை​ய ஆய்வாளர் பிர​வீனா மார்ச் 12-ல் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

உயி​ரிழந்த மாண​வி​யின் குடும்​பத்​தினரை பல்​வேறு அரசி​யல் கட்​சி​யின் தலை​வர்​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். போலீ​ஸாருக்கு சம்​பவம் நடை​பெற்று 9 நாட்​களாக எந்தவித துப்​பும் கிடைக்​காமல் திணறினர்.

இந்​நிலை​யில், வேடநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்த புரோட்டா மாஸ்​டர் கொடுத்த ரகசிய தகவலை தொடர்ந்​து, அப்​பகு​தி​யில் இருந்த காற்​றாலை கோபுர சிசிடிவி கேம​ரா​வில் பதி​வாகி இருந்த காட்​சிகள் மூலம், சாயல்​குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்​வரனை போலீ​ஸார் மார்ச் 19-ம் தேதி கைது செய்​தனர்.

இதுதொடர்​பாக குளத்​தூர் காவல் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, மார்ச் 20-ம் தேதி பலத்த பாது​காப்​புடன் வேடநத்​தம் காட்​டுப்​பகு​திக்கு தர்ம முனீஸ்​வரனை அழைத்து வந்து சம்​பவம் குறித்து நடித்து காண்​பிக்​கச் செய்து போலீ​ஸார் அதை வீடியோ பதிவு செய்​தனர்.

குற்​ற​வாளி கைது செய்​யப்​பட்​டதை தொடர்ந்து மார்ச் 20-ம் தேதி பெற்​றோர் தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனையி​லிருந்து மாண​வி​யின் சடலத்தை பெற்று 10 நாட்​களுக்​குப் பிறகு தகனம் செய்​தனர்​.

SCROLL FOR NEXT