தமிழகம்

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த 5 பேரில் இருவர் உடல்கள் விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டன

சிறுவனின் பிறந்தநாளை கொண்டாட சென்ற நிலையில் துயரம்

செய்திப்பிரிவு

திருச்சி: மத்​திய பிரதேசம் ஜபல்​பூர் பர்கி அணை​யில் படகு மூழ்கி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் உயி​ரிழந்த நிலை​யில் 2 பேரின் உடல்​கள் திருச்சி வந்​தன.

திருச்சி மாவட்​டம் நவல்​பட்டு அண்ணா நகரைச் சேர்ந்​தவர் காம​ராஜ் (39). மத்​திய பிரதேச மாநிலம் ஜபல்​பூர் கமேரி​யா​வில் உள்ள மத்​திய அரசின் வெடிமருந்து தொழிற்​சாலை​யில் பணி​யாற்றி வந்​தார். இவரது மனைவி திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் மூலனூரைச் சேர்ந்த கார்​குழலி. இவர்​களது மகன்​கள் புவிதரன் (11), தமிழ்​வேந்​தன் (6).

இதில், தமிழ்​வேந்​தனுக்கு மே 7-ம் தேதி பிறந்த நாள் வரு​கிறது. பிறந்​த​நாளை கொண்​டாடு​வதற்​காக கார்​குழலி​யின் தாய், தந்​தை, சகோ​தரர் பரிமேலழகர், இவரது மனைவி சவு​பாக்​கி​யம், மகன் மயூரன், மகள் இனியா ஆகியோர் ஜபல்​பூர் சென்​றிருந்​தனர். அங்கு ஏப்​.30-ம் தேதி மாலை ஜபல்​பூர் பர்கி அணை​யில் அனை​வரும் படகு சவாரி சென்​ற​போது படகு கவிழ்ந்து விபத்​துக்​கு உள்​ளானது.

இதில் காம​ராஜ், கார்​குழலி, தமிழ்​வேந்​தன், சவு​பாக்​கி​யம், மயூரன் ஆகியோர் நீரில் மூழ்​கினர். பரிமேலழகர், புவிதரன், இனியா ஆகியோர் உயிர் தப்​பினர். கார்​குழலி​யின் பெற்​றோர் படகில் செல்​லாத நிலை​யில் அவர்​களும் உயிர் தப்​பினர். கார்​குழலி, சவு​பாக்​கி​யம் உடல்​கள் மீட்​கப்​பட்ட நிலை​யில், காம​ராஜ், தமிழ்​வேந்​தன், மயூரன் ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி எம்​.பி. துரை வைகோ, ஜபல்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் ராகவேந்​திரா சிங்கை தொடர்பு கொண்டு பேசி​யுள்​ளார். இதுபற்றி துரை வைகோ கூறும்​போது, “ஹெலி​காப்​டர் உதவி​யுடன் ராணுவத்​தினர், மாநில பேரிடர் மீட்​புப் படை, காவல் துறை, உள்​ளூர் மீனவர்​கள், மாவட்ட நிர்​வாகம் இணைந்து இரவு பகலாக தேடு​தல் பணி​களில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும், விரை​வில் அனை​வரது உடல்​களை​யும் மீட்டு விடு​வோம் என்​றும் தெரி​வித்​துள்​ளனர்.

முன்​ன​தாக, திருச்​சிக்கு கொண்டு வரப்​படும் கார்​குழலி, சவு​பாக்​கி​யம் ஆகியோர் உடல்​களை அவர​வர் வீடு​களுக்கு அனுப்பி வைக்க ஆம்​புலன்ஸ் வசதி ஏற்​படுத்தி தந்​துள்ள திருச்சி மாவட்ட ஆட்சி​யர் வே.சர​வணன், மத்​திய பிரதேசத்​தில் மீட்​புப் பணி​களில் உதவி புரிந்து வரும் தமிழ​ரான ஐஏஎஸ் அதி​காரி இளை​ய​ராஜா ஆகியோ​ருக்கு நன்​றி” என்​றார். இதனிடையே இரு​வரது உடல்​களும் பாதுகாப்புத் துறை விமானத்​தில் நேற்​றிரவு திருச்சி விமான நிலை​யம் கொண்​டு​வரப்​பட்​டு, உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

தலை​வர்​கள் இரங்​கல்: இந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​கும் உறவினர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் உயி​ரிழந்​தது துயரம் தரு​கிறது. நீரில் மூழ்​கிய​போதும் 4 வயது மகனை அணைத்​த​படி மரணித்​துள்ள தாயின் புகைப்​படம் நெஞ்சை உலுக்​கு​கிறது. அனைத்து மாநில அரசுகளும் பாது​காப்பு முன்னேற்​பாடு​களைக் கட்​டா​யம் உறுதி செய்ய வேண்​டும்.

தவாக தலை​வர் வேல்​முரு​கன்: மத்​திய அரசு உடனடி​யாகத் தலை​யிட்​டு, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை மீட்டு தமிழகத்​துக்கு கொண்​டு​வர​வும் காணா​மல் போனவர்​களைக் கண்​டறிவதுடன், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்​கப்பட வேண்​டும்.

SCROLL FOR NEXT