தமிழகம்

அமைச்சர் சேகர்பாபு மகன்கள் தொடர்புடைய நிறுவனம் உள்பட 5 இடங்களில் வருமான வரி சோதனை

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​வாக்​காளர்​களுக்கு கொடுப்​ப​தற்​காக பணம் பதுக்​கிய​தாக எழுந்த புகாரின்​ பேரில், அமைச்​சர் சேகர்​பாபு மகன்​கள் தொடர்​புடைய நிறு​வனம் உள்பட 5 இடங்​களில் வரு​மானவரித் துறை​யினர் சோதனை நடத்​தினர்.

தமிழக அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, சென்​னை​யில் உள்ள துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். இந்​நிலை​யில், அவரை வெற்றி பெற வைக்​கும் நோக்​கில், துறை​முகம் தொகுதி வாக்​காளர்​களுக்கு பணப் ​பட்​டு​வாடா செய்​யப்​படு​வ​தாக தேர்​தல் பறக்​கும் படை​யினருக்​கும், வரு​மானவரித் துறை​யினருக்​கும் புகார்​கள் வந்​தன.

          

இதையடுத்து, மயி​லாப்​பூரில் சேகர்​பாபு மகன்​கள் ஜெயசிம்​மன், விக்​னேஷ் ஆகியோரின் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும், சாலை கட்​டு​மான டெண்​டர் நிறு​வனத்​தில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை செய்​தனர். உடன் தேர்​தல் பறக்​கும் படை​யினரும் சென்று சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இந்த சோதனையின் போது பாதுகாப்புக்காக மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினர் நிறுத்​தப்​பட்​டனர். சோதனை​யின் முடி​வில் அங்​கிருந்து பல முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இதே​போல் வடபழனி​யில் அருள்​முருகன், கீழ்ப்​பாக்​கத்​தில் பிரேம் குமார் ஆகியோரது வீடு​களி​லும், அதைத் தொடர்ந்து ஏழுகிணறு, அடையாறு ஆகிய பகு​தி​களில் உள்ள வீடு​களி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது.

மொத்​தம் 5 இடங்​களில் நடை​பெற்ற இந்த சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. வரு​மானவரித் துறை​யினருடன், பறக்​கும் படை​யினரும் சேர்ந்து சோதனை​யில் ஈடு​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி உள்​ளது.

SCROLL FOR NEXT