தமிழகம்

‘டேப்ஸ்' ஓய்வூதிய திட்ட இறுதி விதிகள் தயாராகும் வரை அடிப்படை சம்பளத்தில் 30% இடைக்கால நிவாரணம்

ஜன.1-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்

செய்திப்பிரிவு

சென்னை: ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​தி​யத் திட்ட இறுதி விதி​முறை​கள் வெளி​யிடப்​படும் வரை, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்​குப் பிறகு ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்​கள் - ஆசிரியர்​களுக்கு மட்​டும், அடிப்​படை சம்​பளத்​தில் 30 சதவீதம் அல்​லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதி​கமோ அத்​தொகை இடைக்​கால நிவாரண​மாக வழங்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களின் நீண்​ட​கால கோரிக்​கையை நிறைவேற்​றும் வகை​யில் கடந்த 2025-ம் ஆண்டு ஜன.4-ம் தேதி, தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் (‘டேப்​ஸ்’) என்ற புதிய ஓய்​வூ​திய திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அதற்​கான அரசாணை வெளி​யிடப்​பட்​ட​போதும் அத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.

‘டேப்​ஸ்’ ஓய்​வூ​திய திட்​டத்​தின் இறுதி விதி​கள் மற்​றும் கணக்​கீட்டு நடை​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டு​வரும் நிலை​யில், இடைப்​பட்ட காலத்​தில் ஓய்​வு​பெறும் ஊழியர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​கும் வகை​யில் இடைக்​கால நிவாரணத்​தொகை வழங்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் இறுதி விதி​கள் அறிவிக்​கப்​பட்​டு, ஒவ்​வொரு ஊழியருக்​கும் அவர்​கள் கடைசி​யாகப் பெற்ற அடிப்​படைச் சம்​பளத்​தில் 50 சதவீதம் ஓய்​வூ​தி​ய​மாக நிர்​ண​யிக்​கும் பணிக்கு காலஅவ​காசம் தேவைப்​படும். எனவே, 1.1.2026-க்​குப் பிறகு ஓய்​வு​பெற்ற ஊழியர்​களுக்கு இடைக்​கால வாழ்​வா​தார ஆதர​வுத்​தொகை வழங்க முடிவுசெய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, ஓய்​வு​பெற்ற ஊழியர் கடைசி​யாகப் பெற்ற அடிப்​படைச் சம்​பளத்​தில் 30 சதவீதம் அல்​லது ரூ.10,000 இதில் எது அதி​கமோ அத்​தொகை இடைக்​கால நிவாரணத் தொகை​யாக நிர்​ண​யிக்​கப்​படும். அதோடு சேர்த்து நடை​முறை​யில் இருக்​கும் அதவிலைப்​படி​யும் வழங்​கப்​படும். இந்த இடைக்​கால நிவாரணத் திட்​டம் 1.4.2003 அன்று அல்​லது அதற்​குப்​பிறகு ரெகுலர் ஊதிய விகிதத்​தில் பணி​யமர்த்​தப்​பட்டு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் (சிபிஎஸ்) கீழ் இருந்​தவர்​கள்.

1.1.2026 அன்று பணி​யில் நீடித்​து, அதற்​குப்​பிறகு வயது முதிர்வு காரண​மாக ஓய்வு பெற்​றவர்​கள், குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தகு​தி​வாய்ந்த பணிக்​காலத்தை நிறைவு செய்​தவர்​கள், பணி​யின்​போது மரணமடைந்த அரசு ஊழியர்​களின் தகு​தி​யான குடும்ப உறுப்​பினர்​கள் ஆகியோ​ருக்கு மட்​டும் பொருந்​தும். அதே​நேரம் 1.1.2026-க்கு முன்​னர் பணியி​லிருந்து ஓய்​வு​பெற்​றவர்​களுக்​கும், பணி​யில் இருந்து வில​கிய​வர்​களுக்​கும் பொருந்​தாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு ஊழியர்​கள் கருத்து: இதுகுறித்து தமிழ்​நாடு தலை​மைச் செயலக சங்​கத் தலை​வர் கு.வெங்​கடேசன் கூறும்​போது, “இடைக்​கால நிவாரணத்​தொகை வழங்​கும் தற்​காலிக ஏற்​பாடு வரவேற்​கத்​தக்​கது. ஆனால், அரசு ஊழியர்​கள் ஓய்​வூ​தி​யத்​தில் ஒரு பகு​தியை முன்​கூட்​டியே பெறும் கம்​யூட்​டேசன் தொகை குறித்​தோ, பணிக்​கொடை பற்​றியோ அரசாணை​யில் எது​வும் குறிப்​பி​டாதது ஏமாற்​றம் அளிக்​கிறது. தேர்​தல் வாக்​குறுதி அளித்​த​படி தவெக அரசு, பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்த வேண்​டும். வரும் பட்​ஜெட் கூட்​டத் தொடரிலேயே அதுதொடர்​பான அறி​விப்பை வெளி​யிட வேண்​டும்” என்​றார்.

தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் கழக பொதுச்​செய​லா​ளர் சோ.சுரேஷ் கூறும்​போது, “டேப்ஸ் ஓய்​வூ​திய திட்​டத்​துக்​கான முழு விதி​முறை​களை​யும் அரசு விரைந்து வெளி​யிட வேண்​டும். தவெக அரசு தனது தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​வாறு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​த வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT