பாரிவேந்தர் | கோப்புப் படம்

 
தமிழகம்

இந்த ஏழுக்குள் தான் போட்டி: பொன்முடி தொகுதிக்கும் குறிவைக்கும் ஐஜேகே

மு.வேல்சங்கர்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்காக இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) திருக்கோவிலூர், அரியலூர், குன்னம் உள்ளிட்ட 7 தொகுதிகளை தயார்படுத்தி வருகிறது.

சட்​டப்​பேரவை தேர்​தலுக்​காக, 234 தொகு​தி​களி​லும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, கட்சி கட்​டமைப்பை வலுப்​படுத்​தும் பணியை ஐஜேகே தீவிரப்​படுத்தி வரு​கிறது. இம்​முறை, ஐஜேகே களமிறங்​கு​வதற்​காக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி​யின் திருக்​கோ​விலூர் உள்​ளிட்ட 7 தொகு​தி​களை தேர்வு செய்து வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். இது குறித்​து, அக்​கட்​சி​யின் தலை​மைக் கழக நிர்​வாகி​கள் வட்​டத்​தில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “நாங்​கள் இப்​போது தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இருக்​கி​றோம். ஒரு சட்​டப்​பேரவை தொகு​திக்கு ஒரு மாவட்​டத் தலை​வர் என்ற அடிப்​படை​யில் 234 தொகு​தி​களுக்​கும் மாவட்​டத் தலை​வர்​களை நியமித்து உள்​ளோம்.

இவர்கள், தங்​களுக்கு அடுத்த நிலை​யி​லான நிர்​வாகி​களை நியமித்து வரு​கின்​ற​னர். இது​வரை 40 தொகுதிகளுக்​கான கிளைப் பொறுப்​பாளர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சில தொகு​தி​களில் பூத்​கமிட்டி வரைக்​கும் அமைக்​கப்​பட்டு கூட்​டங்​களை நடத்தி வரு​கி​றோம். அதன்​படி, முதல் கூட்​டத்தை திருக்​கோ​விலூரில் நடத்​தினோம். இம்​முறை அங்கே ஐஜேகே போட்​டி​யிடும். அதேசம​யம், அனைத்​துத் தொகு​தி​களி​லும் ஐஜேகே-வுக்கு கட்​டமைப்பு இருக்​கிறது என்​பதை கூட்​ட​ணித் தலை​மைக்கு நிரூபித்​துக் காட்​டி​னால் தான், நாங்​கள் கேட்​கும் தொகு​தி​களைப் பெற முடி​யும்.

இந்​தத் தேர்​தலில் நாங்​கள் போட்​டி​யிடு​வதற்​காக அரியலூர், லால்​குடி, குன்​னம், விரு​தாச்​சலம், திருக்​கோ​விலூர், திரு​வாடானை, செங்​கல்​பட்டு ஆகிய 7 தொகு​தி​களை தேர்வு செய்து வைத்​திருக் கிறோம். இன்​னும் எங்​களுக்​கான தொகு​தி​கள் எண்​ணிக்கை இறு​தி​யாக​வில்லை என்​றாலும் இந்த ஏழு தொகு​தி​களுக்​குள் தான் நாங்​கள் போட்​டி​யிடு​வோம்” என்​றனர்.

SCROLL FOR NEXT