தமிழகம்

செல்களுக்குள் நேரடியாக புற்றுநோய் மருந்து செலுத்த நானோ ஊசி கண்டுபிடிப்பு: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி நிர்​வாகம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: உலக அளவில் பெண்​களின் உயி​ரிழப்​புக்கு மார்​பகப் புற்றுநோய் முக்​கிய காரண​மாக உள்​ளது.

கீமோதெரபி, கதிர்​வீச்சு உள்​ளிட்ட வழக்​க​மான சிகிச்சை முறை​கள், புற்றுநோய் அல்​லாத திசுக்​களுக்கு தீங்கு விளைவிக்​கின்​றன. இந்நிலை​யில், சென்னை ஐஐடி, ஆஸ்​திரேலி​யா​வின் மோனாஷ் பல்​கலைக்​கழக விஞ்ஞானிகள் இணைந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நேரடி​யாக புற்றுநோய் செல்​களுக்​குள் செலுத்​தும் நானோ ஊசியை கண்​டறிந்​துள்​ளனர்.

இது மருந்​தின் சிகிச்சை செயல்​திறனை மேம்​படுத்​துகிறது. சிகிச்சை செல​வு​களை​யும் குறைக்​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி பயன்​பாட்டு இயக்​க​வியல், உயிரிமருத்​து​வப் பொறி​யியல் துறை உதவி பேராசிரியர் சுவாதி சுதாகர் கூறும்​போது, “மார்​பகப் புற்றுநோய் சிகிச்​சைக்கு பயன்​படுத்​தப்​படும் இந்த நானோ ஊசி, அடுத்த கட்​ட​மாக இதர புற்றுநோய்களுக்​கான சிகிச்​சை​யிலும் பயன்​படுத்​தப்​படும் வாய்ப்​பு உள்​ளது” என்​றார்​.

SCROLL FOR NEXT