கல்யாணி ராக பல்லவியில் அசத்திய பரத் சுந்தர் | சென்னை இசை அரங்கம்

கல்யாணி ராக பல்லவியில் அசத்திய பரத் சுந்தர் | சென்னை இசை அரங்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மியூசிக் அகாடமி சார்​பில் ஒவ்​வொரு இசை​விழா​விலும் 80-க்​கும் மேற்​பட்ட இசை நிகழ்ச்​சிகளும், கருத்​தரங்​கு​களும் நடை​பெறுகின்​றன. இதில் இளம் கலைஞர்​கள், வளரும் கலைஞர்​கள் உட்பட பிரபல மற்​றும் சீனியர் வித்​வான்​களும் பங்​கேற்​பது குறிப்​பிடத்​தக்​கது. சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வில் வித்​வான் பரத் சுந்​தரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

அவருக்கு பக்​கபல​மாக எம்​.​ராஜீவ் (வயலின்), பட்ரி சதீஷ்கு​மார் (மிருதங்​கம்), என்​.குருபிர​சாத் (கடம்) இருந்​தனர். ‘ஏரா நாபை’ எனத் தொடங்​கும் பட்​ட​ணம் சுப்​பிரமணிய ஐயரின் தோடி ராக வர்​ணத்​துடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் பரத் சுந்​தர். அடுத்​த​தாக டாக்​டர்.

எம்​.​பால​முரளி​கிருஷ்ணா​வின் நாட்டை ராகப் பாடலை (கான சுதாரஸ பாண) பாடி​னார். பூர்வி கல்​யாணி ராகத்​தில் சிறிய ஆலாபனை செய்​து​விட்​டு, கோபால​கிருஷ்ண பார​தி​யின் ‘சற்றே விலகி இரும் பிள்​ளாய்’ என்ற பிரபல​மான பாடலைப் பாடி​னார்.

‘பக்​தி​யில் கரை கண்​ட​வன், பார்த்து பார்த்து உண்​ட​வன்’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். திருப்​புன்​கூர் சென்ற நந்​த​னார், தான் சிவதரிசனம் செய்​வதற்கு நந்தி குறுக்கே இருப்​ப​தைக் கண்​டு, ‘சற்றே விலகி இருப்​பாய். நான் சிவதரிசனம் செய்ய வேண்​டும்’ என்று நந்​தியை வேண்​டு​கிறார். நந்​த​னாரின் உணர்​வு​களை இந்​தப் பாடல் மூலம் வெளிப்​படுத்​துகிறார் கோபால​கிருஷ்ண பார​தி.

அடுத்​த​தாக முத்​துஸ்​வாமி தீட்​சிதரின்  ராக க்ருதி ( தியாக​ராஜ மஹத்​வஜாரோக), தியாக​ராஜ சுவாமி​யின் காபி​நா​ராயணி ராகக் கீர்த்​தனை (சரஸ சாம​தான) ஆகிய​வற்​றைப் பாடி​னார் பரத்சுந்​தர். பிர​தான ராக​மாக ஆபேரி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனை​யுடன் ‘பஜரே ரே மானஸ’ எனத் தொடங்​கும் மைசூர் வாசு தே​வாச்​சா​ரி​யாரின் பாடலைப் பாடி​னார்.

‘ராஜகு​மாரம் ராமம் பவன ஜாப்​தம் அவனிஜ மனோஹரம்’ என்ற வரி​யில் நிர​வல் செய்து ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். தனி ஆவர்த்​தனத்​தில் பட்ரி சதீஷ்கு​மாரும், குருபிர​சாத்​தும் போட்டி போட்​டுக் கொண்டு தங்​கள் திறமையை வெளிப்​படுத்​தினர். மிருதங்க நாதம் தொடர்​பாக பட்ரி சதீஷ்கு​மார் பல ஆராய்ச்​சிகள் செய்​துள்​ளார்.

ராகம் தானம் பல்லவிக்கு கல்​யாணி ராகத்தை தேர்ந்​தெடுத்​தார் பரத் சுந்​தர். கண்ட சாபு தாளத்​தில் திஸ்ர நடை​யில், ‘நீ தயை புரிய தாமத​மாகுமா சரவண பவா வரம் அருள உனை வேண்டி நிதம் பணிந்​தேன்’ என்ற பல்லவியை த்ரி​காலத்​தில் பாடி அசத்​தி​னார். பாடகருக்கு உறு​துணை​யாக, நிழல் போல வயலினில் தொடர்ந்​தார் ராஜீவ். கல்கி கிருஷ்ண​மூர்த்​தி​யின் ‘கு​யில்​காள் முகில் கண்​ணன் வரக் கூவீரோ’ என்ற பாடலுடன் கச்​சேரியை நிறைவு செய்​தார் பரத் சுந்​தர்.

வித்​வான் பி.எஸ்​.​நா​ராயண ஸ்​வாமி மற்​றும் விதூஷி எஸ்​.சௌமி​யா​விடம் இசை பயின்ற பரத் சுந்​தர், தற்​போது இந்​தி​யா​வில் மட்​டுமின்றி வெளி​நாடு​களி​லும் கச்​சேரி செய்​து வரு​கிறார். மேலும்​, பல மாணவர்​களுக்​கு இசை கற்​பித்​து வருகிறார்​.

கல்யாணி ராக பல்லவியில் அசத்திய பரத் சுந்தர் | சென்னை இசை அரங்கம்
பிரபல நட்சத்திரமாக மின்னும் பந்துலா ரமா | சென்னை இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in