தமிழகம்

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘மீனவர்​களின் பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண மத்​திய அரசை வலி​யுறுத்​து​வேன்’ என்று உலக மீனவர் தின விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி உறுதி அளித்​தார்.

சென்னையில் ஆளுநர் மாளி​கை​யில், உலக மீனவர் தின விழா நேற்று கொண்​டாடப்​பட்டது. இதில் பல்​வேறு மாவட்​டங்களைச் சேர்ந்த மீனவர்​கள், மீனவர் நல அமைப்​பு​களின் நிர்​ வாகி​கள் கலந்​து​கொண்​டனர். இந்த விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசி​ய​தாவது:

மீனவர்​கள் தங்​களின் உயிரை பணய​மாக வைத்து மீன்​பிடித்து வரு​கிறார்​கள், நாடு முழு​வதும் 3 கோடிக்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் உள்​ளனர். மீனவர்​களின் நலனில் முன்பு ஆட்சி செய்த மத்​திய - மாநில அரசுகள் எந்​த​வித அக்​கறை​யும் செலுத்​தவில்லை. ஆனால் மீனவர்​கள் மற்​றும் மீனவ மக்​களின் வளர்ச்​சிக்​காக தனி அமைச்​சகம் உரு​வாக்​கிய​வர் பிரதமர் நரேந்​திர மோடி. மீனவ சமு​தாய மக்​களின் வளர்ச்​சிக்​காக பல்​வேறு நலத்​திட்​டங்​களை மத்​திய அரசு தற்​போது செயல்​படுத்தி வருகிறது.

கடல் வளத்தை பாது​காப்​பவர்​கள் மீனவர்​கள்​தான். அவர்​கள் நவீன தொழில்​நுட்​பங்​களைக் கற்​றறிந்து அதன்​படி மீன்​பிடி தொழிலில் ஈடுபட வேண்​டும்.

மீனவ சமு​தாய மக்​களை அடிக்​கடி சந்​தித்து அவர்​களின் குறை​களை​யும் தேவை​களை​யும் கேட்​டறிந்​துள்​ளேன. மீனவ மக்​களுக்கு பிரச்​சினை​கள் இருப்பது உண்​மை​தான் அவர்​களின் கோரிக்கை குறித்து மத்​திய அரசுக்கு பரிந்​துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அழுத்​தம் கொடுப்​பேன்.இவ்​வாறு ஆளுநர் பேசி​னார்.

SCROLL FOR NEXT