சென்னை: மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்க இருப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் சில கிறிஸ்தவ அமைப்புகள், சமூகநலத் துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடத்திய காணொலி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரன் கலந்து கொண்டது முதல்வரின் முதல் உரைக்கு பொருத்தமில்லாத செயல்.
ஜே.சி.டி.பிரபாகரன் அவரது கடந்த கால கிறிஸ்தவ ஊழியத்தின் நினைவில் மதவாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதும், மதவெறி கலவரத்தைத் தூண்டும் வகையில் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதும் கண்டிக்கத்தக்கது.
அதேபோல, அமைச்சர் வன்னியரசு, அந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக முதல்வர் வன்னியர சின் வரம்பற்ற சட்டவிரோதப் பேச்சுக்காக அவரைக் கண்டிக்க வேண்டும். அமைச்சர் வன்னியரசு மீதும், சட்டப்பேரவை தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.