போ​ராட்டத்​தில் ஈடுபட்ட காடேஸ்​வ​ரா சுப்​பிரமணி​யத்​தை அப்​புறப்​படுத்​திய ​போலீஸார்​.

 
தமிழகம்

பெருமாநல்லூர் அருகே கோயில் அகற்றம்: போராட்டத்தின்போது இந்து முன்னணி தலைவர் காயம்

செய்திப்பிரிவு

திருப்​பூர்: பெரு​மாநல்​லூர் அருகே கோயிலை அகற்​றியதற்கு கண்​டனம் தெரி​வித்து நடை​பெற்ற போராட்​டத்​தின்​போது நடந்த தள்​ளு​முள்​ளு​வால் இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் லேசான காயமடைந்​தார்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசியை அடுத்​துள்ள பெரு​மாநல்​லூர் ஈட்​டிவீரம்​பாளை​யம் ஊராட்​சிக்கு உட்​பட்ட ராக்​கி​யாபட்டி அறிவொளி நகர் பகு​தி​யில் குமரன்​குன்று என்ற பெயரில் முரு​கன், விநாயகர், சிவலிங்​கம், நந்தி உள்​ளிட்ட சந்​நி​தி​கள் கொண்ட செல்வ முத்​துக்​கு​மார சுவாமி கோயில் 2 ஏக்​கர் பரப்​பில் அமைந்​துள்​ளது.

அரசுக்​குச் சொந்​த​மான இடத்தை ஆக்​கிரமித்து கோயில் கட்​டி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நேற்று வரு​வாய்த் துறை​யில் கோயிலை இடித்து அகற்​றினர். இதையறிந்த இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், பொதுச் செய​லா​ளர் கிஷோர்​கு​மார் உள்​ளிட்​டோர் அங்கு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது போலீ​ஸாருக்​கும், இந்து முன்​னணி​யினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யத்​துக்கு லேசான காயம் ஏற்​பட்​டது. பின்​னர், அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி, அனை​வரை​யும் சமா​தானப்​படுத்​தினர்.

இதையடுத்​து, திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் சேர்க்​கப்​பட்​டார். அங்கு இந்து முன்​னணி​யினர் மற்​றும் பாஜக​வினர் திரண்​ட​தால் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது.

இதற்​கிடை​யில், இந்த சம்​பவத்​தைக் கண்​டித்து தாராபுரம் சாலை, அவி​நாசி சாலை, காந்தி நகர், புஷ்பா திரையரங்கு சந்​திப்​பு, புதிய பேருந்து நிலை​யம் என 5 இடங்​களில் மறியலில் ஈடு​பட்ட இந்து முன்​னணி​யினர் 120 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்து முன்​னணி மாநில அமைப்​பாளர் ச.ராஜேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யினரின் தூண்​டு​தலால், அதி​காரி​கள் கோயிலை இடித்​துள்​ளனர்.

அங்கு சென்ற இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தில், அவருக்கு காயம் ஏற்​பட்​டுள்​ளது. 100 ஆண்​டு​கள் பழமை​யான வழி​பாட்​டுத் தலத்தை இடிக்​கக் கூடாது என்ற சட்​டத்தை மீறி, கோயிலை இடிக்க உத்​தர​விடு​வதே தண்​டனைக்​குரிய குற்​ற​மாகும். அத்​து​மீறிய போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

SCROLL FOR NEXT