தமிழகம்

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு அலுவலர்: ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழ்​நாடு முழு​வதும் சீமைக் கரு​வேல மரங்​கள் அகற்​றும் பணிக்​காக மாவட்ட அளவில் ஒருங்​கிணைப்பு அலு​வலர்​களை நியமிக்க மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு முழு​வதும் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்ற உத்​தர​விடக்​கோரி மதி​முக பொதுச்செய​லா​ளர் வைகோ உள்பட பலர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொதுநல மனு தாக்​கல் செய்​தனர்.

இதனை விசா​ரித்த நீதிப​தி​கள், அடுத்த பரு​வ​மழை தொடங்​கும் முன்பு சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​ற​வும் இப்​பணியை மேற்​பார்​வை​யிட​வும் மதுரை அமர்​வுக்கு உட்​பட்ட மாவட்​டங்​களுக்கு உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிப​திகள் ஏ.செல்​வம், சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு உட்பட்ட மாவட்​டங்​களுக்கு வி.​பார​தி​தாசன் ஆகி​யோரை நியமித்​தும் உத்​தர​விட்​டனர்.

இந்த உத்​தரவு நிறை​வேற்​றப்​பட்​டது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​வதற்​காக வழக்கு நீதிப​தி​கள் சதிஷ்கு​மார், பரதசக்​கர​வர்த்தி முன்பு பட்​டியலிடப்​பட்​டிருந்​தது. அரசுத் தரப்​பில், தேர்​தல் நடை​பெறு​வ​தால், தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்​ளன.

இதனால் சீமைக்​ கரு​வேல மரங்​களை அகற்​றும் பணி​களைத் தொடங்க இயல​வில்​லை. தேர்​தல் முடிந்​தவுடன் பணி விரை​வாக தொடங்​கப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

இதை பதிவு செய்​து​கொண்ட நீதிப​தி​கள், ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​றும் பணியை மேற்​பார்​வை​யிடு​வதற்​காக வரு​வாய் மண்டல அலு​வலர் தகு​திக்கு குறை​யாத ஒரு​வரை மேற்​பார்வை அலு​வல​ராக மாவட்ட ஆட்​சி​யர்​கள் நியமிக்க வேண்​டும்.

மேற்​பார்வை அலு​வலரின் தொடர்பு எண் மற்​றும் விபரங்​களை மேற்​பார்​வை​யாளர்​களாக நியமிக்​கப்​பட்​டிருக்​கும் ஓய்​வு​பெற்ற நீதிப​தி​களிடம் வழங்க வேண்​டும்.

தற்​போது வறட்சி நில​வு​கிறது.

இப்​போது விவ​சா​யிகள் சற்று ஓய்ந்​திருப்​பர். நீர்​நிலை​களி​லும் தண்​ணீர் குறை​வாக இருக்​கும். இதனால் சீமைக் கரு​வேல மரங்​களை​யும் சுலப​மாக அகற்ற முடி​யும்.

எனவே தேர்​தல் முடிந்​தவுடன் உடனடி​யாக சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​று​வதற்​கான பணி​களை தொடங்கி விரை​வில் முடிக்க வேண்​டும். அடுத்தகட்ட விசா​ரணை ஜூன் 5-க்கு தள்ளிவைத்து உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT