தமிழகம்

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: அம்​பேத்​கரை சாதித் தலை​வ​ராகப் பார்க்​கும் நிலையை மாற்ற, தமிழகத்​தில் 2027-28 கல்வி ஆண்​டிலிருந்து 3 முதல் 10-ம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்​களுக்கு கற்​பிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காரைக்​குடியைச் சேர்ந்​தவர்​கள் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார், விஜய் என்ற விஜயகுமார். இவர்​கள் புலிக்​குத்தி பேருந்து நிறுத்​தம் பகு​தி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அம்​பேத்​கரின் சுவரொட்​டியைச் சேதப்​படுத்தி அதை வீடியா பதிவு செய்து சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​ட​தாக விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி நிர்​வாகி போலீ​ஸில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் இரு​வர் மீதும் சோம​நாத​புரம் போலீ​ஸார் எஸ்​.சி. எஸ்​.டி.வன்​கொடுமைச் சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில் இரு தரப்​பினர் இடையே சமரசம் ஏற்​பட்​டுள்​ள​தால் கீழமை நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை ரத்து செய்​யக்​கோரி இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி விசா​ரித்​தார்.

ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, ‘மனு​தா​ரர்​களிடம் அம்​பேத்​கர் குறித்து சரி​யான புரிதல் இல்​லை. இரு​வரும் தலா 101 அம்​பேத்​கர் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்​கி, அதில் ஒன்றை படிக்க வைத்​துக்​கொண்​டு, மற்ற புத்​தகங்​களை டி.கல்​லுப்​பட்​டி​யில் உள்ள முரு​கப்பா அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் படிக்​கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்​களுக்​கும், மற்ற வகுப்பு மாணவர்​களுக்​கும் வழங்க வேண்​டும்.

இரு​வரும் புத்​தகத்தை முழு​மை​யாகப் படித்து வாய்​மொழித் தேர்​வுக்கு தயா​ராக இருக்க வேண்​டும். மேலும், அடை​யாறு புற்​று​நோய் நிறு​வனத்​துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும்’ என உத்​தர​விட்​டார்.

அடுத்த விசா​ரணை​யின்​போது, மனு​தா​ரர்​கள் இரு​வரிட​மும் அம்பேத்கரின் வாழ்க்கை மற்​றும் பணி​கள் தொடர்​பாக 30 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன. இரு​வரும் திருப்​தி​கர​மாக பதிலளித்​தனர். இதையடுத்து, புகார்​தா​ரரும் வழக்கை முடிக்க சம்​மதம் தெரி​வித்​தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: அம்​பேத்​கரின் வாழ்க்கை மற்​றும் பங்​களிப்​பு​கள் பற்றி இளைஞர்​களுக்கு ஆழமாகக் கற்​பிக்​கப்​பட​வில்​லை. அவரை சாதிக் கண்​ணோட்​டத்​தில் பார்க்​கக் கூடாது.

அவர் முழுதேசத்​துக்​கும் சொந்​த​மானவர். அவரைப் பற்றி மாணவர்​களுக்​குக் கற்​பிக்க வேண்​டும். இந்த வழக்​கில் தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறைச் செயலர் ஆகியோர் எதிர்​மனு​தா​ரர்​களாகச் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

இவர்​கள் மாநிலப் பாடத்​திட்​டத்​தில் மூன்​றாம் வகுப்பு முதல் பத்​தாம் வகுப்பு வரையி​லான சமூக அறி​வியல் பாடத்​தில் இந்​திய அரசி​யலமைப்பு சட்ட வரைவுக் குழு​வின் தலை​வ​ராக அம்​பேத்​கர் ஆற்​றிய பங்​கு, நீதி, சுதந்​திரம், சமத்​து​வம் மற்​றும் சகோ​தரத்​து​வம் ஆகிய அரசி​யலமைப்பு தொலைநோக்​குப் பார்​வைக்கு அவர் ஆற்​றிய பங்​களிப்​பு, சுதந்​திரப் போராட்ட இயக்​கத்​தி​லும் ஜனநாயக தேசத்​தைக் கட்​டமைப்​ப​தி​லும் அவர் ஆற்​றிய பங்​கு, பொருளா​தா​ரம், சட்​டம் மற்​றும் சமூக சிந்​தனை ஆகிய துறை​களில் அவர் ஆற்​றிய கல்​வி​சார் சாதனை​கள் ஆகிய தலைப்​பு​களில் பாடங்​களை கற்​பிக்க வேண்​டும்.

இந்​தப் பாடத் திட்​டத்தை 2027- 2028 கல்​வி​யாண்டு முதல் அமல்​படுத்த அரசு முன்வர வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறை செயலர் ஆகியோர் 2027 ஜன.21-ம் தேதி விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். மனு​தா​ரர்​கள் மீதான வழக்கு ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT