தமிழகம்

சிறுபான்மையினர் நலனுக்காக அதிக திட்டங்களை செய்தது யார்? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சிறுபான்மையினர் நலனுக்​காக அதிக திட்​டங்​களை செயல்​படுத்​தி​யது யார் என்​பது குறித்து சட்​டப்​பேர​வை​யில் தவெக, திமுக மற்​றும் அதி​முக இடையே கார​சா​ர​மான விவாதம் நடை​பெற்​றது.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று சிறு​பான்​மை​யினர் நலத்​துறை மானியக் கோரிக்கை மீது அமைச்​சர் ஏ.எம்​.ஷாஜ​கான் பதிலளித்​துப் பேசும்​போது, “வரலாற்​றில் முதல்​முறை​யாக சிறு​பான்​மை​யினர் நலத்​துறை​யில் 20-க்​கும் அதி​க​மான அறி​விப்​பு​களை ஒரே பட்​ஜெட்​டில் தவெக அறி​வித்​துள்​ளது.

இந்த அறி​விப்​பு​கள் கண்​துடைப்​புக்​கான அறி​விப்​பு​கள் அல்ல; அது சிறு​பான்​மை​யினர் சமூகத்தை கைதூக்​கும் அறி​விப்​பு​கள்” என்​றார். அதைத்​தொடர்ந்து நடை​பெற்ற விவாதம் வரு​மாறு:

தமி​முன் அன்​சாரி (மஜக): சிறு​பான்​மை​யின மக்​களுக்கு கடந்த அதி​முக, திமுக ஆட்​சிக் காலங்​களில் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதி​முக ஆட்​சி​யில்​தான் ஹஜ் இல்​லம் கட்​டு​வதற்கு ரூ.15 கோடி ஒதுக்​கியது. அதை திமுக ரூ.40 கோடி​யாக உயர்த்​தி​யது. அனைத்​தை​யும் தாங்​களே செய்​த​தாகக் கூறு​வது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல. அமைச்​சர்

நிர்​மல்​கு​மார்: திமுக​வும், அதி​முக​வும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்​சித்​த​தால்​தான் திமுக கூட்​ட​ணி​யில் இருந்து இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் வெளியே வந்​துள்​ளது. (இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து திமுக உறுப்​பினர்​கள் அமளி​யில் ஈடு​பட்​டனர்)

மெய்​ய​நாதன் (தி​முக): முஸ்​லிம் மக்​களுக்​காக திமுக அரசு 3.5 சதவீத இடஒதுக்​கீடு, பள்​ளி​வாசல்​கள் புதுப்​பிப்​புக்கு ரூ.50 கோடி, கபருஸ்​தான்​களுக்கு நிதி உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்​தி​யுள்​ளது. பட்டா இடங்​களில் பள்​ளி​வாசல், தேவால​யங்​கள் கட்ட 30 நாட்​களுக்​குள் அனு​மதி வழங்​கும் நடை​முறையை​யும் திமுக​தான் கொண்டு வந்​தது.

ஓ.எஸ்​.மணி​யன் (அதி​முக): ரம்​ஜான் நோன்​புக் கஞ்சி தயாரிக்க 5,200 மெட்​ரிக் டன் அரிசியை விலை​யில்​லாமல் வழங்​கியது முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா. மத்​திய அரசு ஹஜ் மானி​யத்தை நிறுத்​தி​ய​போது, மாநில அரசே அதை முழு​மை​யாக ஏற்று வழங்​கியது. இவ்​வாறு வி​வாதம்​ நடை​பெற்​றது.

SCROLL FOR NEXT