கல்வி நிலையங்களில் சாதி பாகுபாட்டை அகற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி வழக்கு

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

Updated on
1 min read

மதுரை: கல்வி நிலை​யங்​களில் சாதி பாகு​பாடு அகற்​று​வது தொடர்​பான நீதிபதி சந்​துரு பரிந்​துரைகளை முழு​மை​யாக அமல்​படுத்​தக் கோரிய வழக்​கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திண்​டுக்​கல் பர்​வேஷ் முஷாரப், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் பள்​ளி, கல்​லூரி​களில் சாதி மற்​றும் மதப் பாகு​பாடற்ற சூழலை உரு​வாக்​கு​வது தொடர்​பான ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்​துரு தலை​மை​யில் குழு அளித்த பரிந்துரை அளித்தார்.

அதில், அரசு மற்​றும் தனி​யார் கல்வி நிறு​வனங்​களின் பெயர்​களி​லிருந்து சாதிப் பெயர்​களை நீக்​குதல், தேவையற்ற சாதி சார்ந்த குறிப்​பு​களை நீக்​குதல் உள்​ளிட்ட பல்​வேறு பரிந்​துரைகள் இடம் பெற்​றுள்​ளன.

இவை அரசால் ஏற்​கப்​பட்​ட​தா, நிராகரிக்​கப்​பட்​ட​தா என்​பது தொடர்​பாக அறிக்கை அளிக்​க​வும், அவற்றை காலக்​கெடு​வுக்​குள் அமல்​படுத்​தவும் குறைதீர் அமைப்பு உரு​வாக்​கவும் அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் எனக் கூறியிருந்தார்.

மனுவை நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்வு வி​சா​ரித்​து, மனு தொடர்​பாக அரசு பதிலளிக்க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை செப்​. 9-க்​கு தள்​ளிவைத்​தனர்​.

<div class="paragraphs"><p><em>உயர் நீதிமன்றம்&nbsp;மதுரை கிளை</em></p></div>
ஆதவ் அர்ஜுனாவின் தவறான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குக: தமிழக பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in