தமிழகம்

அனைத்து மருத்துவமனையிலும் கூடுதல் பாதுகாப்பு: டீன்களுக்கு சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசு மருத்​துவ கல்​லூரி மருத்துவமனைகளிலும் பாது​காப்பை பலப்​படுத்த வேண்​டும்’ என்று டீன்​களுக்கு சுகா​தா​ரத்​ துறை செயலர் செந்​தில்​கு​மார் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு எதிரே தூங்​கிக் கொண்​டிருந்த ரவுடியை ஒரு கும்​பல் வெட்டி படு​கொலை செய்​தது.

இந்த சம்​பவம், அங்கு சிகிச்சை பெறும் நோ​யாளி​கள், பார்​வை​யாளர்​கள், மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், மருத்​துவப் பணி​யாளர்​கள் என அனை​வரின் பாது​காப்​பை​யும் கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது.

இதைத்​தொடர்ந்​து, அனைத்து அரசு மருத்​துவ கல்​லூரி மருத்துவமனை டீன்​களிட​மும் சுகா​தா​ரத்​ துறை செயலர் செந்​தில்​கு​மார், நேற்று காணொலி வாயி​லாக ஆய்​வுக் கூட்​டம் நடத்​தி​னார்.

இதில் அவர் பேசி​ய​தாவது: அனைத்து அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் மற்​றும் மருத்துவமனைகளில் பாது​காப்பை பலப்​படுத்த வேண்​டும். மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேம​ராக்​களின் செயல்​பாடு​களை ஆய்வு செய்​து, அவை செயல்​படும் தன்​மையை உறு​தி​செய்ய வேண்​டும். தேவைப்​பட்​டால் கூடு​தலாக, சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்தி 24 மணி நேர​மும் கண்​காணிக்க வேண்​டும்.

சேலம் அரசு மருத்​துவ கல்​லுாரி மருத்துவமனைக்கு வரும் நோ​யாளி​கள், பார்​வை​யாளர்​களுக்​கு, அடை​யாள அட்டை என்ற ‘டேக்’ அணி​வித்து மருத்துவமனை வளாகத்​துக்​குள் அனு​ம​திப்​பது சோதனை முறை​யில் நடந்து வரு​கிறது.

இதை அனைத்து அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்துவமனைகளிலும் அமல்​படுத்த வேண்​டும். மருத்துவமனை பாதுகாப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள காவலர்​கள் மற்​றும் போலீ​ஸாரை அழைத்து ஆய்​வுக் கூட்​டம் நடத்​தி, பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும். சந்​தேகப்​படும்​படி​யாக யாராவது மருத்துவமனையில் சுற்​றி​னால் உடனடி​யாக போலீ​ஸாருக்கு தெரியப்​படுத்​தி, விசா​ரிக்க வேண்​டும்.

கீழ்ப்​பாக்​கம் மருத்துவமனையில் தற்​போது கட்​டு​மானப் பணி நடை​பெறுகிறது. இரவிலும் பணி நடை​பெறு​வ​தால் பணி​களுக்கு ஆட்​கள் உள்ளே வரு​வது வழக்​க​மான​தாக இருந்​துள்​ளது.

இந்த விவ​காரத்​தில் பாதுகாப்புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த தனி​யார் நிறு​வனத்​தின் காவலர்​களின் பாதுகாப்பு கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது. இதுகுறித்​து, சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்​திடம் விளக்​கம் கேட்​கப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT