தமிழகம்

டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை தேவை: மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: டெங்கு காய்ச்​சல் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​று, மாவட்ட நிர்​வாகங்​களுக்கு சுகா​தா​ரத் ​துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சுகா​தா​ரத்துறை அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை: அதி​க​மான வெப்​பநிலை, சீரற்ற மழை பொழிவு போன்றவை டெங்கு காய்ச்​சலை பரப்​பும் ஏடிஸ் வகை கொசுக்​கள் உற்​பத்​திக்கு காரண​மாக உள்​ளன.

கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு டெங்கு காய்ச்​சல் பாதிப்பு தமிழகத்​தில் தீவிர​மாக இருந்​தது. உள்​ளாட்சி அமைப்​பு​கள், சுகா​தா​ரத் துறை​யின் ஒருங்​கிணைந்த செயல்​பாடு​களின் காரண​மாக கடந்த ஆண்டு பாதிப்​பும், உயி​ரிழப்​பும் குறைந்​தது.

நடப்​பாண்​டில் மேலும் குறைப்​ப​தற்கு சில நடவடிக்​கைகளை முன்​னெடுக்க வேண்​டிய அவசி​யம் உள்​ளது. அதன்​படி, சுகா​தா​ரத் ​துறை இணை​யதளத்​தில் டெங்கு பாதிப்​பு​கள் குறித்த விவரங்​களை உடனுக்​குடன் அவசி​யம் பதிவேற்ற வேண்​டும்.

அப்​போது​தான், நிகழ் நேர தகவல்​கள் கிடைக்​கப் பெற்று டெங்கு பரவலை தடுக்க முடி​யும். நோய் பரப்​பும் பூச்​சிகள், கொசுக்​களை கண்​காணித்து அவற்​றின் உற்​பத்​தியை குறைக்க நடவடிக்கை எடுப்​பது முக்​கி​யம் ஆகும்.

அரசு மருத்​து​வ​மனை​களில் டெங்கு பரிசோதனை​களை கட்​ட​ணமில்​லாமல் மேற்​கொள்​வதற்​கான கட்​டமைப்பு தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். குறிப்​பாக, பரிசோதனை உபகரணங்​கள் போதிய எண்​ணிக்​கை​யில் இருப்பு வைத்​திருக்க வேண்​டும்.

கொசு உற்​பத்​திக்கு இடமளிக்​காத வகை​யில் வீடு​கள், தொழில்​நிறுவன வளாகங்​களை பராமரிக்க வேண்​டும். நோய் சார்ந்த சூழல்​கள் குறித்து விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT