தமிழகம்

திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியது ஏன்? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் கே.ஆர். பெரியகருப்​பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் எதிர்த்​துப் போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுப​தி​யிடம் தோல்​வியை சந்​தித்​தார்.

அதையடுத்​து, திருப்​பத்​தூர் தொகு​திக்​கான எம்​எல்​ஏ-​வாக தேர்​வாகி​யுள்ள சீனி​வாச சேதுபதி சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்பு மற்​றும் சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் பங்​கேற்க தடை விதிக்​கக்​கோரி​யும், வேலூர் அரு​கில் உள்ள திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்​பப்​பட்ட ஒரு தபால் வாக்கை மீட்டு திருப்​பத்​தூர் தொகுதி கணக்​கில் சேர்க்க உத்​தர​விடக்​கோரி​யும் ஒரு ஓட்​டில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்​பாளர் கே.ஆர். பெரியகருப்​பன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் எல். விக்​டோரியா கவுரி, என். செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய விடு​முறை கால அமர்​வில் அவசர வழக்​காக ஞாயிற்​றுக்​கிழமை​யான நேற்று விசா​ரிக்​கப்​பட்​டது.

அப்​போது முன்​னாள் அமைச்​சர் பெரியகருப்​பன் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, என்​.ஆர்​.இளங்கோ ஆகியோர், மனு​தா​ரர் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தோல்​வியடைந்​துள்​ள​தாக திருப்​பத்​தூர் தொகுதி தேர்​தல் அதி​காரி அறி​வித்​துள்​ளார்.

ஆனால் மறு​வாக்கு எண்​ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்​லை. சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு வேலூர் அருகே உள்ள திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வாக்கை திருப்​பத்​தூர் தேர்​தல் அதி​காரி நிராகரித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக மனு​தா​ரர் எழுப்​பிய கேள்வி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் முறை​யாக எந்​தவொரு விளக்​க​மும் அளிக்​க​வில்​லை. ஒரு​வேளை செல்​லுபடி​யாகும் அந்த ஒரு தபால் வாக்கை மீண்​டும் சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கே அனுப்​பி​யிருந்​தால் இந்​நேரம் இரு வேட்​பாளர்​களும் சம வாக்​கு​கள் பெற்​றிருப்​பர்.

குலுக்​கல் முறை​யில் வெற்றி வேட்​பாளர் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு இருப்​பார், என வாதிட்​டனர். அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், இது​போன்ற சூழ்​நிலைகளில் என்ன நடை​முறையை பின்​பற்ற வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் ஏதேனும் விதி​முறை​களை வகுத்​துள்​ளதா எனக்​கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பெரியகருப்​பன் தரப்பு மூத்த வழக்​கறிஞர்​கள், இது​போன்ற குளறு​படிகளை தவிர்க்க தேர்​தல் ஆணை​யத்​திடம் எந்த நடை​முறை​யும் இல்​லை. இதுசம்​பந்​த​மாக தேர்​தல் ஆணை​யத்​துக்கு பல புகார்​கள் அளித்​தும் எந்த பதி​லும் இல்லை என்​றனர்.

தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுபதி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் மனு சிங்​வி, வி.​ராக​வாச்​சாரி ஆகியோர், தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தேர்​தல் வழக்கு மட்​டுமே தொடர முடி​யும்.

எம்​எல்ஏ- என சட்​டப்​பூர்​வ​மாக அறி​வி்க்​கப்​பட்​ட​வர் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்​கக்​கூ​டாது என்​றோ, சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் கலந்து கொள்​ளக்​கூ​டாது என்றோ எப்​படி தடை கோர முடி​யும்.

ஒரு வேட்​பாளர் வெற்றி பெற்​றவர் என அறிவிக்​கப்​பட்டு விட்​டால் அவர் தனது கடமையை ஆற்ற அனு​ம​திக்க வேண்​டும். சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் பங்​கேற்க தடை விதித்​தால் அத்​தொகு​தி​யின் மக்​கள் உரிமை தான் பாதிக்​கப்​படும், என்​றனர்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கே.தருண், இதுதொடர்​பாக தேர்​தல் வழக்கு மட்​டுமே தொடர முடி​யும். தபால் வாக்குகள் தபால் துறை மூலம் அனுப்​பப்​படு​வ​தில்​லை. தபால் வாக்குகளைப் பெற தேர்​தல் ஆணை​யம், துணை வட்​டாட்​சி​யர் அந்​தஸ்​தில் ஒரு அதி​காரியை நியமிக்​கும். அந்த அதி​காரி தபால் வாக்​கு​களைப் பெற்​று, சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களின் தேர்​தல் அதி​காரி​களுக்கு அனுப்பி வைப்​பார்.

அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களும் இந்த நடவடிக்​கைகளை கண்​காணிப்​பர் என்​ப​தால் அதில் தவறு நடக்க வாய்ப்பு இருக்​காது. ஒரு​வேளை ஒரு தொகு​தி​யின் தபால் வாக்கு தவறு​தலாக மற்​றொரு தொகு​திக்கு மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டால் அந்த சூழலில் என்ன செய்ய வேண்​டும் என்​பது குறித்து சட்​டத்​தில் எந்த விளக்​க​மும் இல்​லை.

தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் வரை அந்த தேர்​தல் தொடர்​பான ஆவணங்​கள் பத்​திரப்​படுத்தி வைக்​கப்​பட்​டிருக்​கும், என்​றார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், ஒரு தொகு​திக்​கான தபால் வாக்கு வேறு ஒரு தொகு​திக்கு மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டது குறித்து மனு​தா​ரர் எழுப்​பிய கேள்வி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உரிய விளக்​கமளிக்​காதது ஏன்? ஒரு வாக்கு வித்​தி​யாசத்​தில் மனு​தா​ரர் தனது வெற்றி வாய்ப்பை இழந்​துள்​ளார்.

இப்​போது தனக்​கான ஒரு தபால் வாக்கை அதி​காரி​கள் வேறு தொகு​திக்கு மாற்றி அனுப்​பி​யுள்​ள​தாக மனு​தா​ரர் குற்​றம் சாட்​டு​கி்றார். ஒரு வாக்கு என்​றாலும் அதற்கு பதிலளிக்க வேண்​டிய கடமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு உள்​ளது. எனவே இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் நாளைக்​குள்​ (மே 11) விரி​வாக பதிலளிக்​க வேண்​டும்​, என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளிவைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT