ஹெச். ராஜா | கோப்புப்படம் 
தமிழகம்

“தகுதியற்றவர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள்” - ஹெச்​.​ராஜா அதிரடி

க.ரமேஷ்

தகு​தி​யற்ற ஆட்​சி​யாளர்​கள் தமி​ழ​கத்தை ஆட்சி செய்​வ​தாக பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக குறிஞ்​சிப்​பாடி​யில் நடந்த பாஜக பொதுக்​கூட்​டத்​தில் ஹெச்​.​ராஜா பேசி​ய​தாவது: ஊழலுடன் போதை பொருட்​களும் அதிக அளவு புழங்​கும் மாநில​மாக தமி​ழ​கம் மாறி​விட்​டது. குற்​றப் பணத்​தி​லும் ஊழல் பணத்​தி​லும் சொத்து சேர்ப்​பவர்​கள் பாவி​கள். ஸ்டா​லின் அரசு இருக்​கும் ஒவ்​வொரு நிமிட​மும் மக்​களுக்கு ஆபத்​து. வள்​ளலார் பக்​தர்​கள் விருப்​பத்​துக்கு எதி​ராக, வடலூரில் வள்​ளலார் சர்​வ​தேச மையத்தை அமைத்து வரு​கி​றார்​கள்.

விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை சரி​யான நேரத்​தில் வாங்​கத் துப்​பில்​லாத அரசாக இந்த அரசு உள்​ளது.மத்​திய அரசு நெல் சேமிப்பு கிடங்​கு​களை அமைக்க ரூ.300 கோடி வழங்​கியது. இது யார் வயிற்​றுக்கு போனது என்று தெரிய​வில்​லை.

இது குறித்து வெள்ளை அறிக்கை கேட்​டால் வெற்​றுப் பேப்​பரை காட்​டு​கி​றார்​கள். தகு​தி​யற்ற ஆட்​சி​யாளர்​கள் தமி​ழ​கத்தை ஆட்சி செய்து வரு​கி​றார்​கள். வரும் தேர்​தலில் ஸ்டா​லின் அரசை மக்​கள் தூக்கி எறிய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

கடலூர் அருகே உள்ள நொச்​சிக்​காட்​டில் சிப்​காட் சிறப்பு தொழிற்​பேட்டை அமைக்க அப்​பகுதி மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​ற​னர்.

இதை​யொட்டி அந்த கிரா​மத்​தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்​டத்​தில் கலந்து கொண்டு பேசிய ஹெச்​.​ராஜா, “தொழிற்சாலை​கள் அமைப்​ப​தற்​காக விளை நிலங்​களைக் கையகப்​படுத்​து​வதை ஏற்க முடி​யாது. இதை ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம்” என்று தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT