தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

காரைக்குடி / சென்னை: நீ​தி​மன்​றத்தை அவமானப்​படுத்​திய மதுரை ஆட்​சி​யரும், எஸ்​.பி.​யும் மன்னிப்பு கேட்க வேண்​டும் என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா தெரி​வித்​தார். திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூண் தீர்ப்பை வரவேற்று காரைக்​குடி​யில் பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா தலை​மையி​லானகட்​சி​யினர் நேற்று பட்டாசு வெடித்​துக் கொண்​டாடினர்.

பின்​னர் ஹெச்​.​ராஜா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தீபத்​தூண் விவ​காரத்​தில் நிரந்​தரத் தீர்​வளித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதற்கு நன்​றி. இந்த விஷ​யத்​தில் மதப் பிரச்​சினையோ, சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையோ ஏற்​பட​வில்​லை. அரசி​யல் உள்​நோக்​குடன் அரசு செயல்​பட்​டது ஏற்​புடையதல்ல என்று தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

இதன்​மூலம், நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்ய நாடாளு​மன்​றத்​தில் மனு அளித்​தது உள்​நோக்​கம் என்​பது தெரி​கிறது. டிச. 1-ம் தேதியே தீபம் ஏற்ற அனு​ம​தித்​திருக்​கலாம். அதை தடுத்​தது முட்​டாள்​தனம். இனி​யா​வது தீபம் ஏற்ற வேண்​டும். தீக்​குளித்து உயி​ரிழந்த பூர்​ணசந்​திரனின் தியாகத்​துக்​காக கிடைத்த நீதி​யாக தீர்ப்​பைக் கருதுகிறேன்.

தமிழக அரசு இந்​துக்​களின் உணர்​வு​களை காயப்​படுத்​தாமல், தீர்ப்பை செயல்​படுத்த வேண்​டும். இந்​துக்கள் எப்​போதும் வன்​முறை​யாளர்​கள் அல்ல. ஆனால், கொள்​கை​யில் உறு​தி​யாக இருந்து வெற்றி பெறு​வார்​கள். இனி​யா​வது தமிழக அரசு சட்​டத்தை மதித்து நடந்​து​கொள்ள வேண்​டும். சட்​டத்தை மீறி, நீதி​மன்​றத்தை அவமானப்​படுத்​தி​யது தொடர்​பாக மதுரை ஆட்​சி​யரும், காவல் ஆணை​யரும் மன்னிப்பு கேட்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பாஜக, இந்து அமைப்பு வரவேற்பு: ​திருப்​பரங்​குன்​றம் தீபத் தூண் விவ​காரம் தொடர்​பான தீர்ப்பை பாஜக மற்​றும் இந்து அமைப்​பு​கள் வரவேற்​றுள்​ளன. இது தொடர்​பாக வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தீர்ப்பு வழங்​கிய சில மணி நேரத்​திலேயே மேல்​முறை​யீடு​ செய்வோம் என மீண்​டும் குட்​டிக்​கரணம் அடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது திமுக அரசு. தீபமேற்​றும் தமிழர் பண்​பாட்டை முடக்க முயலும் திமுக அரசு, இன்​னும் எத்​தனை முறை நீதி​மன்​றத்​தால் குட்​டுப்​பட்​டால் திருந்​தும்? தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வது 100 சதவீதம் உறு​தி.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: இது நியாய​மான, நடுநிலை​யான தீர்ப்​பு. சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை எழாத​போது, மக்​களிடையே தமிழக அரசு அச்​சத்தை ஏற்​படுத்தி இருக்கக் கூடாது.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம்: தீபம் ஏற்​று​வதைத் தடுக்க திமுக அரசு செய்த அத்​தனை சதிச் செயல்​களை​யும் முறியடித்​து, நீதியை நிலை​நாட்​டி​யுள்​ளது நீதி​மன்​றம். இந்​துக்​களின், முருக பக்​தர்​களின் உரிமையை நிலை​நாட்​டிய, வரலாற்​றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இந்து முன்​னணி வரவேற்​கிறது.

மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன்: தீபம் ஏற்​று​வதற்​காக உயிரை மாய்த்​துக் கொண்ட முருக பக்​தர் பூரணசந்​திரன் தியாகத்​துக்​கு, உரிய நீதியை நீதி​மன்​றத் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது.

பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை: சுடு​காட்​டில்​தான் பிணத்தை எரிக்க வேண்​டும், பழக்க வழக்​கங்​களை மாற்​றக் கூடாது என்று அமைச்​சர் ரகுபதி பேசி​யிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. நாவடக்​கம் இன்றி திரி​யும் திமுக​வினருக்கு தமிழக மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள்.

பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ். பிர​சாத்: நீதி​மன்​றத்​தின் கண்​ணி​யத்​துக்கு எதி​ராக, நீதிப​தி​களை​யும் நீதி​மன்​றத்தை அவம​தித்து இந்​திய அரசி​யல் சாசனத்தை மீறி உள்​ளார் அமைச்​சர் ரகுப​தி. அவரை முதல்​வர் ஸ்டா​லின் உடனடி​யாக டிஸ்​மிஸ் செய்ய வேண்​டும். அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்,

நாதக ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் தமிழக அரசு கையாண்ட முறையை நீதி​மன்​றம் கண்​டித்​துள்​ளது. அரசு கூடு​தல் கவனம் செலுத்​தி, பிரச்​சினை உரு​வா​காமல் செய்​திருக்​கலாம்.

SCROLL FOR NEXT