தமிழகம்

ஹெச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை

நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்.ராஜாவுக்கு ஏற்​பட்ட பக்​க​வாத பாதிப்​புக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர் குடும்​பத்​தினர் மற்​றும்

நண்​பர்​களு​டன் பேசக்​கூடிய வகை​யில் நலமுடன் உள்ளார் என்று சென்னை அப்போலோ மருத்​து​வ​மனை தெரி​வித்​துள்​ளது.

பாஜக மூத்த தலை​வர் மற்​றும் தேசி​யக் குழு உறுப்​பினர் ஹெச்.ராஜா (68), நேற்று முன்​தினம் சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்சி பங்​கேற்​ற​போது திடீரென மயங்கி விழுந்​தார்.

          

உடனடி​யாக அவர் அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு முதல்​கட்ட சிகிச்​சைகள் அளிக்​கப்​பட்​டன. பின்​னர், அவர் மேல் சிகிச்​சைக்​காக சென்னை ஆயிரம் விளக்​குப் பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

மூளை ரத்​தக்​குழா​யில் அடைப்பு ஏற்​பட்​டிருந்​த​தால், அவருக்கு மருத்​து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்​தனர். இந்​நிலை​யில், அப்போலோ மருத்​து​வ​மனை​யின் இயக்​குநர் (மருத்​துவ சேவை​கள்) பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “பாஜக மூத்த தலை​வர் ஹெச்.ராஜா பக்​க​வாத பாதிப்​புக்​காக (Stroke) மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர் குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களு​டன் பேசக்​கூடிய வகை​யில் நலமுடன் உள்​ளார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT