தமிழகம்

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் ஆர்​.என்​.ரவி நேற்று திடீரென டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

சட்ட மசோ​தாக்​கள் விவ​காரம் மற்​றும் நிகழ்​வு​களில் ஆளுநர் வெளி​யிடும் கருத்​துகள் அடிப்​படை​யில், ஆளுநர் ஆர்​.என்​.ரவிக்​கும் தமிழக அரசுக்​கும் இடை​யில் பனிப்​போர் நிலவி வரு​கிறது.

இந்த வகையில் சித்த மருத்​துவ பல்​கலைக்​கழக மசோ​தாவை ஆளுநர் குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு தற்​போது அனுப்​பி​யுள்​ளார். இந்​தச் சூழலில் ஆளுநர் நேற்று திடீரென டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

இன்று பிற்​பகல் வரை அங்கு இருப்​பார் என்​றும், அதன்​பின் சென்னை திரும்​பு​வார்​ என​ ஆளுநர்​ ​மாளிகை வட்​​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT