தமிழகம்

ஆவின் மாட்டுத்தீவன ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஆவின் நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான மாட்​டுத் தீவன உற்​பத்தி ஆலைகளை தனி​யாருக்​குத் தாரை​வார்க்​கும் முயற்​சியை தமிழக அரசு கைவிட வேண்​டும்’ என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் நிறு​வனம், பால் உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், உற்​பத்​தி​யாளர்​களின் நலனுக்​காக​வும் ஈரோடு, காசி​பாளை​யம், ஓசூர் உள்​ளிட்ட இடங்​களில் மாட்​டுத்​தீவன உற்​பத்தி ஆலைகளை நடத்தி வரு​கிறது.

இதன்​மூலம் விவ​சா​யிகளுக்கு மானிய விலை​யில் தீவனங்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த ஆலைகளை நிர்​வகிக்க தனி​யாரிடம் ஒப்​படைக்க தமிழக அரசு டெண்​டர் கோரி​யிருப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

இதனால், ஆலைகளில் பணி​யாற்​றும் 125 ஊழியர்​களுக்கு தங்​கள் வாழ்​வா​தா​ரம் மற்​றும் பணி பாது​காப்பு குறித்து அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. அரசு நிறு​வனங்​களைத் தனி​யாருக்​குத் தாரை​வார்க்​கும் இத்​தகைய நடவடிக்​கைகள் சிறு​தொழில் சார்ந்த தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களைப் பாதிக்​கும்.

எனவே, ஆவின் மாட்​டுத்​தீவன ஆலைகளை அரசே தொடர்ந்து நஷ்ட​மில்​லாமல் நடத்தி மேம்​படுத்த வேண்​டும். அரசின் எந்த நிறு​வனத்​தை​யும் தனி​யாருக்கு தாரை​வார்க்​கும் முயற்​சியை அரசு மேற்​கொள்​ளக் கூடாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT