அக்பர் அலி, சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்தவர் முபாரக் அலி. இவரது மனைவி செய்யது அலி பாத்திமா(35). இவருக்கு பர்வீன்(18) என்ற மகளும், பாரூக்(13) என்ற மகனும் உள்ளனர்.
சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில் செய்யது அலி பாத்திமா, மனைவியைப் பிரிந்து வாழ்ந்த அக்பர் அலி (55) என்பவரை 2-வது திருமணம் செய்தார்.
இதற்கிடையே இறந்த முபாரக் அலியின் காப்பீட்டு பணத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டு, செய்யது அலி பாத்திமாவை தாக்கிய வழக்கில் கைதான அக்பர் அலி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் அவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, பாரூக், பர்வீன், அவரது தாய் சிக்கந்தர் பீவி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அப்போது அக்பர் அலி மீதும் தீப்பற்றியது.
இதில் பலத்த காயமடைந்த 5 பேரையும் போலீஸார் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூதாட்டி சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா, அக்பர் அலி மற்றும் சிறுவன் பாரூக் ஆகியோர் உயிரிழந்தனர். சிறுமி பர்வீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அக்பர் அலி, சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா