புதுடெல்லி / சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப் பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கில், ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை விதித்தது. இதனை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்.12-ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், “இத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் சரணடைவதில் விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்தது. மேலும் தண்டனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க முறையிட தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.