தமிழகம்

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

விரைவில் சட்டப்​பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக இறுதி வாக்​காளர் பட்​டியலை தலை​மைத் தேர்​தல் அதி​காரி அச்​சனா பட்​நாயக் இன்று வெளி​யிடு​கிறார். விரை​வில் தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான அறி​விப்பு வரவுள்​ளது.

இந்​திய தேர்​தல் ஆணை​யம் சார்​பில் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வதற்​கான எஸ்​ஐஆர் பணி​கள் முடிந்து டிச.19-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

          

வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட டிச.19 முதல் கடந்த ஜன.30-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் பெயர் சேர்த்​தல், திருத்​தம், பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட வாக்​காளர்​கள், ஆட்​சேப கடிதம் அளித்து மீண்​டும் பெயர் சேர்த்​துக்​கொள்​ளும் பணி​கள் நடை​பெற்​றன.

இறுதி வாக்​காளர் பட்​டியல் பிப்​. 17-ம் தேதி வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்​கிடை​யில் எஸ்​ஐஆர் பணி​களுக்கு எதி​ராக திமுக சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்​கில் கடந்த ஜன.29-ம் தேதி பிறப்பித்த உத்​தர​வில், "முரண்​பாடு​கள் என்ற பிரி​வில் இடம்​பெற்​றுள்ள நபர்​களின் பெயர் பட்​டியலை கிராம பஞ்​சா​யத்து அலு​வல​கங்​கள், பொது இடங்​கள் மற்​றும் தாலு​கா, துணை பிரிவு அலு​வல​கங்​கள், நகரப் பகு​தி​களில் உள்ள வார்டு அலு​வல​கங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் வெளி​யிட வேண் டும்" என்று அறி​வுறுத்​தி​யது.

அதன்​படி, முரண்​பாடு​கள் பிரி​வில் இடம்​பெற்ற வாக்​காளர்​கள் பட்​டியல் கடந்த பிப்​. 7-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதன் மீதான மறுப்​புரைகளை அளிக்க, உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, பிப்​.16-ம் தேதி வரை 10 நாட்​கள் அவகாசம் வழங்​கப்​பட்​டது. இந்த கால​கட்​டத்​தில் பெறப்​பட்ட மனுக்​களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் தேவைப்​படு​கிறது. அதனால் இறுதி வாக்​காளர் பட்​டியல் பிப்​.17-ம் தேதிக்கு பதிலாக, 23-ம் தேதி வெளி​யிடப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அனைத்து பணி​களும் நிறைவடைந்​த நிலை​யில், சென்னை யில் தலை​மைச் செயல​கத்​தில் இன்று பிற்​பகல் 2.30 மணிக்கு இறுதி வாக்​காளர் பட்​டியலை தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிடு​கிறார். இந்த வாரம் அல்​லது அடுத்த வாரத்​தில் தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான தேதி​யை இந்​தி​ய தேர்​தல்​ ஆணை​யம்​ அறிவிக்​கவுள்​ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT