விமலா

 
தமிழகம்

வருவாய்த் துறை அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ஆதரவாக இருந்த டிஎஸ்பி மீதும் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வரு​வாய்த் துறை அதி​காரி​யிடம் லஞ்​சம் கேட்​ட​தாக லஞ்ச ஒழிப்​புத் துறை பெண் காவல் ஆய்வாளர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். உடந்​தை​யாக இருந்​த​தாக டிஎஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த வரு​வாய்த் துறை அதி​காரி ஒரு​வர் லஞ்​சம் கேட்​ப​தாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாருக்கு புகார் சென்​றது. இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குந​ரான கூடு​தல் டிஜிபி அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி காவல் ஆய்​வாளர் விமலா விசா​ரணை நடத்​தி​னார்.

அவர் புகாருக்​குள்​ளான வரு​வாய்த் துறை அதி​காரி​யிடம் விசா​ரணை நடத்​தி​னார். ஒரு கட்​டத்​தில் `உங்​கள் மீது நடவடிக்கை எடுக்​காமல் இருக்க லஞ்​சம் தர வேண்​டும்' என மிரட்​டிய​தாக கூறப்​படு​கிறது.

இதனால் பயந்​து​போன அந்த அதி​காரி லஞ்ச ஒழிப்​புத் துறை உயர் போலீஸ் அதி​காரி​களிடம் இது தொடர்​பாக முறை​யிட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக ஐஜி துரைகு​மார் தலை​மையி​லான போலீ​ஸார் ரகசிய விசா​ரணை நடத்​தினர்.

இதில் இன்​ஸ்​பெக்​டர் விமலா மீதான குற்​றச்​சாட்டு உறுதி செய்​யப்​பட்​டது. இதுகுறித்த விசா​ரணை அறிக்கை லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் அருணிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அவர் விமலாவை பணி​யிடை நீக்​கம் செய்து உத்​தர​விட்​டார். மேலும் சம்​பந்​தப்​பட்ட இன்​ஸ்​பெக்​டருக்கு ஆதர​வாக செயல்​பட்​ட​தாகக் கூறப்​படும் டிஎஸ்பி ஜாய் தயாள் ஊட்​டிக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

SCROLL FOR NEXT