தமிழகம்

“கட்டதுரை திருந்து​வது மாதிரியே இல்லை” - ‘வின்னர்’ பட வசனத்தை கூறி பழனிசாமி சுவாரசியம்

செய்திப்பிரிவு

‘வின்​னர்’ திரைப்​படத்​தில் வரும் ‘கட்​டதுரை திருந்​து​வது மாதிரியே இல்​லை’ என்ற வசனத்​தைக் கூறி நாகை பொதுக் கூட்​டத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சுவாரசி​ய​மாக்​கி​னார்.

நாகை மாவட்​டத்​தில் உள்ள நாகை, வேதா​ரண்​யம், கீழ்​வேளூர் ஆகிய 3 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் போட்​டி​யிடும் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து நேற்று அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: புதுக்​கோட்​டை​யில் பேசிய திமுக தலை​வர் ஸ்டா​லின் நாட்டு மக்​களுக்கு எதை​யும் சொல்​ல​வில்​லை. என்​னைப் பற்றி என்​னவெல்​லாம் அவதூறு பேச முடி​யுமோ அவ்​வளவு பேசி இருக்​கிறார்.

எங்கள் கட்சி பாஜக​வுக்கு அடிமை என்​கிறார். ஆனால், அதி​முக தொண்​டன் கூட யாருக்​கும் அடிமை கிடை​யாது.​ ‘வின்​னர்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்​தில் நகைச்​சுவை காட்​சி​யில் ஒரு வசனம் இருக்கும்.

          

‘கட்​ட​துரை திருந்​து​வது மாதிரியே இல்லை’ என்று ஒரு வசனம் வரும். அதே​போன்ற நிலை​மை​தான் இப்போது இருக்​கிறது. அதைப்​பற்றி நான் அதி​கம் பேசுவது நாகரி​க​மாக இருக்​காது. தமிழகத்​தில் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் ஒற்​றுமை​யாக இருப்​ப​தாக பேசுகிறார்​கள். ஆனால், புதுச்​சேரி​யில் தனித்​தனி​யாக நிற்​கிறார்​கள். மக்​களை ஏமாற்​றும் இந்த நாடகம் ஒரு​போதும் எடு​ப​டாது. மக்​களை குறைத்து எடை போடாதீர்​கள். மக்​கள் அறிவு கூர்​மை​யானவர்​கள். எது சரி தவறு என்று சிந்​தித்து முடிவு எடுக்​கக்​கூடிய ஆற்​றல் மிக்​கவர்​கள்.

பழனி​சாமி சாதனை​களைப் பற்றி பேசுவ​தில்லை, அவருக்கு கொள்கை கிடை​யாது என்று முதல்​வர் பேசி​யிருக்​கிறார். அதி​முக அரசில் குறுவை சாகுபடிக்கு காப்​பீட்டு திட்​டம் கொண்டு வந்​தோம். ஆனால், திமுக ஆட்​சி​யில் குறு​வைக்கு காப்​பீடு திட்​டம் கொண்டு வரவில்​லை. திமுக​வின் சாதனை, 4 ஆண்​டு​களில் ஊழல் செய்​தது தான்.

நான் ஏற்​க​னவே சவால் விட்​டிருக்​கிறேன். இப்​போது, அதி​முக ஆட்​சி​யின் சாதனை​களை பட்​டியலிட்டு சொல்​கிறேன். ஸ்டா​லின் முதல்​வர் ஆனபிறகு என்​னென்ன சாதனை​கள் என்று செய்​திருக்​கிறோம் என்று சொல்​லட்​டும். மக்​களிடம் விளக்​குங்​கள். மக்​கள் தீர்ப்பு கொடுக்​கட்​டும். தமிழகத்​தில் ஒரே ஆண்​டில் 11 மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள் கொண்டு வந்​தோம்.

ஸ்டா​லினின் 5 ஆண்டு ஆட்​சி​யில் ஒரு மருத்​து​வக் கல்​லூரியை கூட கொண்டு வர முடிய​வில்​லை. 10 ஆண்​டு​களில் 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள், 7 சட்​டக் கல்​லூரி​கள், 27 பாலிடெக்​னிக் கல்​லூரி​கள், 68 கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள், 4 பொறி​யியல் கல்​லூரி​கள், 4 வேளாண் கல்​லூரி​கள், 5 கால்​நடை மருத்​துவ கல்​லூரி, 1,200 கோடி​யில் மிகப்​பெரிய கால்​நடை பூங்கா கொண்டு வந்​தோம்.

முஸ்​லிம்​களுக்​கு ஏகப்​பட்ட திட்​டங்​களை நிறைவேற்றி இருக்​கிறோம். பள்​ளி​வாசலுக்கு நோன்பு காலத்​தில் அரிசி கொடுத்​தது அதி​முக அரசு. ஹஜ் பயணம் மேற்​கொள்ள நிதி உதவி வழங்​கப்​பட்​டது. உலமாக்​களுக்கு ஓய்​வூ​தி​யம் உயர்த்​தப்​பட்​டது. இருசக்கர வாக​னம் வாங்க மானி​யம் தரப்​பட்​டது. கண்ணை இமை காப்​பது​ போல, சிறு​பான்மை மக்​களை நாங்​கள் காப்​போம். சிறு​பான்மை மக்​களுக்கு பாது​காப்பாக இருக்​கக்​கூடிய ஒரே இயக்​கம் அதி​முக. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT