தமிழகம்

“சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு தர வேண்டிய சூழல்” - பழனிசாமி விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு படைக்கே பாது​காப்​புக்கு இன்​னொரு படை அமைக்க வேண்​டிய சூழல் நில​வு​கிறது என ​அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தலை​மைச் செயலக வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் தவெக ஆட்சி பொறுப்​பேற்று முதல்​முறை​யாக சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட ஆளுநர் உரை​யில் பல புதிய திட்​டங்​கள் இடம்​பெறும் என்று எதிர்​பார்த்​தோம்.

ஆனால், மாற்​றம் எது​வுமில்​லாமல் ஏமாற்​றம் தான் மக்​களுக்கு மிச்​ச​மாகி இருக்​கிறது. ‘கன​வில் போடப்​பட்ட மாக்​கோலம்’ ஆக ஆளுநர் உரை அமைந்​திருக்​கிறது. தவெக ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு 150 போக்சோ வழக்​கு​கள், பெண்​களுக்கு எதி​ரான 126 பாலியல் குற்​றங்​கள் பதிவுசெய்​யப்​பட்​டுள்​ளன. இவற்றை தடுக்க அறிவிக்​கப்​பட்ட சிங்​கப்​பெண் சிறப்பு படைக்கே பாது​காப்​புக்கு இன்​னொரு படை அமைக்க வேண்​டிய சூழல் நில​வு​கிறது.

விவ​சா​யிகளுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை முழு​மை​யாக நிறைவேற்​ற​வில்​லை. காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் தவெக கூட்​ட​ணி​யில் உள்​ளனர். இதை பயன்​படுத்தி கர்​நாடக முதல்​வரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, நமக்கு கிடைக்க வேண்​டிய பங்கு நீரை பெற்​றிருந்​தால் மேட்​டூர் அணை​யில் இருந்து நீரை திறந்​திருக்​கலாம். அதற்கு எந்த முயற்​சி​யை​யும் எடுக்​க​வில்​லை. இதற்​கிடையே அடிக்​கடி மின்​வெட்​டு.

கேட்​டால் பியூஸ் கேரியர் திருட்டு போகிறது என்​கின்​றனர். தேவை​யான மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்​து, தடை​யில்லா மின்​சா​ரத்தை வழங்​கு​வதற்கு பதிலாக காரணங்​களை சொல்லி கொண்டு இருக்​கின்​றனர். எனது மகன் மிதுன், அரசி​யலுக்கு வரு​வதை பற்றி தொடர்ச்​சி​யாக பல வதந்​தி​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. அது தவறு. எனது மகன் மிதுன் அதி​முக​வில் அடிப்​படை உறுப்​பின​ராக மட்​டும் தான் இருக்​கிறார்.

கட்​சி​யில் எந்த பதவி​யிலும் அவர் இல்​லை. எனது மகன் அரசி​யலுக்கு வரமாட்​டார் என்​பதை திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துக் கொள்​கிறேன். அதே​போல் முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் ராஜி​னாமா செய்ய இருப்​ப​தாக வரும் செய்​தி​கள் பற்றி அவரிடம் தான் கேட்​கவேண்​டும். அதி​முக தலைமை சரி​யாக இருந்த காரணத்​தால் தான் சி.​வி.சண்​முகத்​தால் வெற்​றி​பெற முடிந்​தது.

பாமக தயவால் தான் தற்​போது அதி​முக எம்​எல்​ஏக்​கள் வெற்​றி​பெற்​றிருப்​ப​தாக கூறும் அவர், ஏன் 2021 தேர்​தலில் விழுப்​புரம் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தோற்​றார்? விழுப்​புரம், பாமக வலிமை​யாக இருக்​கிற இடம் தானே. கூட்​ட​ணி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டும் என்று அவர் பேசுகிறார். அதி​முக செயற்​குழு​வில் 272 பேர் உள்​ளனர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் தனித்​தனி​யாக கட்சி நிர்​வாகி​களு​டைய ஆலோ​சனை பெறப்​பட்டு பிறகு செயற்​குழு, பொதுக்​குழு கூட்​டப்​படும். எந்த கட்​சி​யும் தொடர்ந்து வெற்றி பெற்ற சரித்​திரம் இல்​லை. மக்​களு​டைய செல்​வாக்கு அதி​முக​வுக்கு இருக்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT