தமிழகம்

9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா​வின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்​கப்​படு​கிறது.

இதையொட்​டி, மெரினா கடற்​கரை​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோர் அஞ்​சலி செலுத்​துகின்​றனர்.

முன்​னாள் முதல்​வரும், அதி​முக​வின் பொதுச்​செய​லா​ள​ராக​வும் இருந்த ஜெயலலிதா​வின் 9-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்​கப்​படு​கிறது.

இதையொட்​டி, மெரினா கடற்​கரை​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, இன்று மலர்​வளை​யம் வைத்​து, மலர் தூவி அஞ்​சலி செலுத்​துகிறார்.

அதைத் தொடர்ந்து எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினை​விட நுழை​வாயி​லின் உள் பகு​தி​யில் உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. இதில் அதி​முக நிர்​வாகி​கள், முன்​னாள் அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

அதே​போல், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், ஜெயலலிதா​வின் தோழி சசிகலா உள்​ளிட்​டோரும் ஜெயலலிதா நினை​விடத்​தில் இன்று மலர்​வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்த உள்​ளனர்.

SCROLL FOR NEXT