தமிழகம்

“உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும்” - அதிமுகவினருக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘உள்​ளாட்​சித் தேர்​தலுக்கு தயா​ராக வேண்​டும்’ என அதி​முக நிர்​வாகி​களுக்கு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் குறித்​தும், கட்​சி​யின் ஆக்​கப்​பூர்​வ​மான வளர்ச்சி பணி​கள் குறித்​தும் திரு​வண்​ணா​மலை, அரியலூர், பெரம்​பலூர் மாவட்​டங்​களைச் சேர்ந்தஅதி​முக​ நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில், சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: தவெக வெற்றி என்​பது ஒரு விபத்​து. திமுக மட்​டும்​தான் நமது எதிரி என தவறாகக் கணித்​து​ விட்​டோம். கடந்த சட்​டப்​பேர​வைதேர்​தலில் உங்​கள் மாவட்​டங்​களில் உள்ள பல தொகு​தி​களில் சிறப்​பாகவே வெற்​றியை பெற்றுகொடுத்​திருக்​கிறீர்​கள். அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள உள்​ளாட்​சித் தேர்​தலை மனதில் வைத்து தீவிர கட்​சிப் பணி​யாற்​றுங்​கள். இம்​மாவட்​டங்​களில் உள்ள அனைத்து உள்​ளாட்சி அமைப்​பு​களி​லும் 100 சதவீதம் வெற்றி பெறும் வகை​யில் உங்​கள் பணி இருக்க வேண்​டும்.

தொண்​டர்​கள் எல்​லோரும் நம்​முடன்​தான் இருக்​கின்​றனர்.பேராசை பிடித்​தவர்​கள், துரோகி​கள்​தான் கட்​சியி​லிருந்து வெளி​யேறி வரு​கின்​றனர். அதி​முக​வில் கிளைச்​செய​லா​ளர் நிலை​யில் வாழ்க்​கை​யைத் தொடங்​கி, பொதுச்​செய​லா​ளர் ஆகி இருக்​கிறேன். கட்​சிக்​காக உழைப்​பவர்​களுக்​கு, அதி​முக​வில் நிச்​ச​யம் அங்​கீ​காரம் கிடைக்​கும். அதற்கு நானே உதா​ரணம்.இது தொண்​டர்களின் கட்​சி. கட்​சிக்​காக உழைக்​கும் தொண்​ட​னுக்கு உரிய பதவி வந்துசேரும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இக்​கூட்​டத்​தில் அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், துணைப்​பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன், முன்​னாள் அமைச்​சர் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

SCROLL FOR NEXT