தமிழகம்

தவெக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல்: காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருந்த காங்​கிரஸ் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதில் மயி​லாடு​துறை, மேலூர், குளச்​சல், விளவங்​கோடு மற்​றும் கிளியூர் ஆகிய 5 இடங்​களில் மட்​டுமே அக்​கட்​சிக்கு வெற்றி கிடைத்​தது.

இந்​தச் சூழலில், வெற்றி பெற்ற எம்​எல்​ஏ-க்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மற்​றும் மாநில தேர்​தல் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில் எம்​எல்​ஏ-க்​கள் ஜமால் முகமது யூனூஸ், விஸ்​வ​நாதன், தாரகை கத்​பட், பிர​வீன் மற்​றும் ராஜேஷ்கு​மார் ஆகியோர் கலந்​து​கொண்​டனர். ஆலோ​சனை​யின்​போது, “தற்​போதுள்ள அரசி​யல் சூழலில் நாம் திமுக கூட்​ட​ணி​யிலேயே நீடிக்க வேண்​டும்; அவசரப்​பட்டு தவெக ஆதரவு போன்ற விவ​காரங்​களில் எந்த முடிவை​யும் எடுக்க வேண்​டாம்” என எம்​எல்​ஏ-க்​களுக்கு செல்​வப்​பெருந்​தகை அறி​வுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது.

ஆலோ​சனைக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்​தகை, “தவெக-வுக்கு ஆதரவு அளிப்​பது தொடர்​பாக அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை மட்​டுமே இறுதி முடிவு எடுக்​கும்” என்று தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, காங்​கிரஸ் எம்​எல்​ஏ-க்​கள் அண்ணா அறி​வால​யத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை நேரில் சந்​தித்​துப் பேசினர். அந்த சந்​திப்​புக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த தேர்​தல் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் கூறுகை​யில், “தமிழக மக்​கள் மாற்​றத்தை விரும்பி வாக்​களித்​துள்​ளனர்.

குறிப்​பாக இளைஞர்​களும், பெண்​களும் தவெக-வை நோக்​கித் திரும்​பியதே அந்த கட்​சி​யின் பிரம்​மாண்ட வெற்​றிக்கு முக்​கிய காரணம். தவெக தரப்​பிலிருந்து என்னை இது​வரை யாரும் அணுக​வில்​லை. கட்​சி​யின் பிற நிர்​வாகி​களை அவர்​கள் தொடர்பு கொண்​டார்​களா என்​பது எனக்​குத் தெரி​யாது.

இருப்​பினும், காங்​கிரஸின் பல நிர்​வாகி​கள் தவெக-வை ஆதரிக்க விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். தவெக தனது சட்​டப்​பேரவை குழுத் தலை​வரைத் தேர்வு செய்த பின் காங்​கிரஸைத் தொடர்பு கொள்​ளக்​கூடும்.

இதுகுறித்து காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராகுல்​காந்​தி, வேணுகோ​பால் ஆகியோ​ருக்கு அறிக்கை அனுப்​பப் ​பட்​டுள்​ளது. அவர்​கள் அனை​வரும் ஆலோ​சித்து இறுதி முடிவு எடுப்​பார்​கள்.

விஜய்யை சாதா​ரண​மாகக் கருத வேண்​டாம் எனத் தேர்​தலுக்கு முன்​ன​தாகவே நான் எச்​சரித்​திருந்​தேன்” என்று குறிப்​பிட்​டார். தவெக​வுக்கு பெரும்​பான்மை கிடைக்​காத​தால் அக்​கட்​சிக்கு காங்​கிரஸ் ஆதரவு அளிக்​கப்​போவ​தாக பேசப்​பட்டு வரும் சூழலில் இந்த ஆலோ​சனைக்​ கூட்​டம்​ முக்​கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT