தமிழகம்

பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் அசத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பிறவிக் குறை​பாடுள்ள நூற்​றுக்​கணக்​கான குழந்​தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்​சைகளை மேற்​கொண்டு மறு​வாழ்வு அளித்​துள்​ள​தாக எழும்​பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக அரசு மருத்​து​வ​மனை​யின் இயக்​குநர் (கூடு​தல் பொறுப்​பு) எஸ்​.ம​தி​வாணன், அறுவை சிகிச்​சைத் துறை தலை​வர் சி.சங்​கர​பார​தி, பச்​சிளங்​குழந்தைகள் நலத் துறை தலை​வர் முத்​துக்​குமரன் ஆகியோர் கூறிய​தாவது: சில குழந்​தைகளுக்கு பிற​வி​யிலேயே சுவாசக் குழா​யும், உணவுக் குழா​யும் பிரி​யாமல் ஒட்​டி​யிருக்​கும். இதனால் உணவுக் குழாய் ஓரிடத்​தில் தடை​பட்​டு​விடும். இக்​குழந்​தைகளால் வாய் வழி​யாக உணவருந்த முடி​யாது.

3 குழந்தைகள்: அத்​தகைய பாதிப்​புடன் 3 குழந்தைகள் சமீபத்​தில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு முதல்​கட்​ட​மாக கேஸ்ட்​ரோக்​டமி எனும் சிகிச்சை மூலம் வயிற்​றில் சிறு குழாய் பொருத்தி அதன் வழி​யாக உணவு வழங்​கப்​பட்​டது.

அதன் தொடர்ச்​சி​யாக பெருங்​குடலில் 15 செ.மீ. வெட்டி எடுக்​கப்​பட்​டு, தடைபட்​டிருந்த உணவுக் குழாய் பகு​தி​யில் மாற்​றிப் பொருத்தி பிரச்​சினை சரிசெய்​யப்​பட்​டது. இதே​போல் பெருங்​குடலின் இறு​திப் பகு​தி​யில் உள்ள நரம்​பு​கள் சில குழந்​தைகளுக்கு பிறக்​கும்​போதே செயலிழந்​திருக்​கும். இதனால் அவர்​களுக்கு ஆசன​வாய் வழியே கழி​வு​கள் வெளி​யேறாது.

மாறாக, அறுவை சிகிச்சை செய்து பெருங்​குடல் பகு​தியை வெளியே எடுத்து அதன் வாயி​லாக கழிவை அகற்ற வழி​செய்ய வேண்​டும். இந்த சிகிச்சை கொலோனஸ்​டமி எனப்​படும். இது​வும் மிகச் சிக்​கலான ஒன்​று.

எழும்​பூர் குழந்தைகள் மருத்​து​வ​மனை​யில் இந்த வகை சிகிச்​சைக்கு பதிலாக ஆசன​வாய் வழியே எண்​டோஸ்​கோபி முறை​யில் செயலிழந்த பெருங்​குடல் பகு​தியை நீக்​கி​விட்​டு, மற்ற பகு​தியை இணைக்​கும் சிகிச்சை 3 குழந்​தைகளுக்கு மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன் பயனாக அவர்​கள் அனை​வரும் நலம் பெற்​றுள்​ளனர்.

பிற​வி​யில் ஏற்​படும் சிறுநீரகப் பாதை அடைப்​புக்​குள்​ளான 4 குழந்​தைகளுக்​கும் திறந்​தநிலை அறுவை சிகிச்சை மூலம் மறு​வாழ்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​தகைய சிகிச்​சைகளை தனி​யார் மருத்​து​வ​மனை​களில் மேற்​கொள்ள ரூ.15 லட்​சம் வரை செல​வாகும். ஆனால் இங்கு முதல்​வர் காப்​பீட்​டின்​கீழ் இலவச​மாக செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT