தமிழகம்

பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்

ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகளுடன் அனுப்பப்பட்டுள்ளது

செய்திப்பிரிவு

சென்னை: பணமோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை விசா​ரிக்க அனு​மதி அளிக்​கக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழுதி உள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையி​லான அதி​முக ஆட்​சி​யில், போக்​கு​வரத்து துறை அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி, போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது‌.

இந்த விவ​காரம் தொடர்​பாக செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது பண மோசடி குற்​றச்​சாட்​டின் பேரில் அமலாக்​கத் துறை வழக்​குப் பதிவு செய்​தது. அவர்​கள் மீது வழக்கு தொடர மாநில அரசு அனு​மதி அளிக்​காத​தால் நீதி​மன்ற விசா​ரணை இன்​னும் தொடங்​காமல் உள்​ளது.

இந்​நிலை​யில்​தான், போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்​ற​தாகக் கூறப்​படும் பணமோசடி வழக்​கில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் சிலருக்கு எதி​ராக சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க அனு​மதிகோரி தமிழக தலை​மைச் செய​லா​ளர் சாய் குமாருக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழு​தி​யுள்ளது.

திமுக அரசு அனுமதி மறுப்பு

முன்​ன​தாக, கடந்த 7 மாதங்​களுக்கு முன்பு இதே வழக்​கில் செந்​தில் பாலாஜியை விசா​ரணை நடத்த அப்​போதைய திமுக அரசு அனு​மதி மறுத்​திருந்த நிலை​யில், தற்​போது அமலாக்​கத் துறை மீண்​டும் அனு​மதி கோரி கடிதம் எழு​தி​யுள்​ளது.

கடந்த 15-ம் தேதி அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்ள 3 பக்​கங்​கள் கொண்ட கடிதத்​தில் கடந்​தாண்டு அப்​போதைய ஆளுநருக்கு அமலாக்​கத் துறை சார்​பில் அனு​மதி கோரி கடிதம் அனுப்​பப்​பட்​டது.

மாநில அரசின் அறி​வுறுத்​தலின்​படி, அக்​கடிதம் திருப்பி அனுப்​பப்​பட்​டது. அக்.2025-ல் அப்​போதைய தலைமைச் செய​லா​ளர் ஆளுநருக்கு எழு​திய கடிதத்​தில், அரசு ஊழியரை விசா​ரிக்க மாநில அரசே தகுதி​யான அதி​காரம் கொண்டது.

எனவே, அமலாக்​கத்துறை ஆளுநரை அணுகு​வதற்​குப் பதிலாக நேரடி​யாக தலை​மைச் செய​லா​ள​ருக்​குத்​தான் கடிதம் எழு​தி​யிருக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

அதன் அடிப்​படை​யில் தற்​போது அமலாக்​கத் துறை தகுந்த ஆதா​ரங்​கள், ரகசிய விசா​ரணை குறிப்​பு​களு​டன் தலை​மைச் செய​லா​ள​ருக்கு புதிய கடிதத்தை அனுப்பி உள்​ளது.

தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் தலை​மையி​லான ஆட்சி தமிழகத்​தில் நடை​பெறு​வ​தால் அவர் என்ன முடிவு எடுக்​கப்​போகிறார் என்​பதை பொறுத்தே இந்த பணமோசடி வழக்​கின் போக்கு செல்​லும் என அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த பணமோசடி வழக்​கில் 2023 ஜூன் 14-ம் தேதி செந்​தில் பாலாஜி அமலாக்​கத் துறை​யால் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், 471 நாள் சிறை​வாசத்​துக்கு பிறகு செப்​டம்​பர் 2024-ல் உச்ச நீதி​மன்​றம் அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

இதனைத் தொடர்ந்து அமலாக்​கத்​துறை சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்​திருந்​தா​லும், குற்​றம் நடந்​த​தாகக் கூறப்​படும் கால​கட்​டத்தில் அவர் அமைச்​ச​ராக இருந்​த​தால், மாநில அரசின் வி​சா​ரணை அனு​மதி இன்​னும் கிடைக்​கப் பெற​வில்​லை. இதனால் நீதி​மன்​ற வி​சா​ரணை இன்​னும்​ தொடங்​கப்​ப​டா​மல் நிலுவையில் உள்ளது.

SCROLL FOR NEXT