இந்திய தேர்தல் ஆணையம்

 
தமிழகம்

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து விதிகள் வகுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

செய்திப்பிரிவு

சென்னை: சமூக வலை​தளங்​களின் வாயி​லாக குழந்தைகளை தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படுத்​து​வது தொடர்​பாக ஆய்வு செய்​து, தேவைப்​பட்​டால் அதுதொடர்​பாக பிரத்​யேக​மாக விதி​கள் வகுக்​கப்​படும் என தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேரவைத் தேர்​தல் நேரத்​தில் குழந்​தைகளை தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு ஈடு​படுத்​தி​யது, பணப்​பட்​டு​வாடா செய்​தது போன்ற ஊழல் நடவடிக்​கை​களில் ஈடு​பட்ட முக்​கிய அரசி​யல் கட்​சிகளுக்கு எதி​ராக சுதந்​திர​மான விசா​ரணை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக்​கோரி கடலூர் மாவட்​டம் புவனகிரியை சேர்ந்த வழக்​கறிஞர் எல்​.​வாசுகி என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட பதில் மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தேர்​தலில் வாக்​காளர்​களுக்கு சட்​ட​விரோத​மாக பணப்​பட்​டு​வாடா செய்​வது தொடர்​பான குற்​றச்​சாட்​டு​களை கையாள போது​மான சட்​டப்​பிரிவு​கள் உள்​ளன. அந்த சட்​டப்​பிரிவு​களின் அடிப்​படை​யில் தேர்​தல் வழக்கு தொடரலாம்.

ரூ.599.24 கோடி பணம் பறி​முதல்: பணப்​பட்​டு​வாடா போன்ற ஊழல் நடவடிக்​கைகளை தடுக்க பறக்​கும்​படை, கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்டு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் நடந்து முடிந்த தேர்​தலில் ரூ.599.24 கோடி பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதே​போல, தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் பயன்​படுத்​து​வது போன்ற நடவடிக்​கை​களில் குழந்​தைகளை ஈடு​படுத்​தக்​கூ​டாது என ஏற்​கெனவே அரசி​யல் கட்​சிகளின் சார்​பில் போட்​டி​யிட்ட வேட்​பாளர்​களுக்கு தனித்​தனி​யாக கடிதங்​கள் மூலம் அறி​வுறுத்​தப்​பட்​டன.

கட்​டாயப்​படுத்​த முடியாது: இந்த வழக்​கில் மனு​தா​ரர் குறிப்​பிட்ட எந்த சம்​பவங்​களை​யும் தெரி​வி்க்​க​வில்லை. பொத்​தாம்​பொது​வாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். வாக்​காளர்​கள் 18 வயது நிரம்​பிய​வர்​கள். சுய​மாக சிந்​தித்து வாக்​களிக்​கக்​கூடிய​வர்​கள். எந்​தவொரு குறிப்​பிட்ட கட்​சிக்​கும் வாக்​களிக்​கும்​படி அவர்​களை யாரும் கட்​டாயப்​படுத்​தவோ, அழுத்​தம் கொடுக்​கவோ முடி​யாது. அதை​யும் தாண்டி வாக்​காளர்​கள் மத்​தி​யில் தங்​களின் செல்​வாக்கை நிரூபிக்க முனை​வதும் ஒரு​வகை​யில் ஊழல் நடவடிக்​கை​தான்.

சமூக வலை​தளங்​களின் வாயி​லாக குழந்​தைகளை தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படுத்​து​வது தொடர்​பாக ஆய்வு செய்​து, தேவைப்​பட்​டால் அது்தொடர்​பாக பிரத்​யேக​மாக விதி​கள் வகுக்​கப்​படும். இவ்​வாறு பதில் மனு​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்கு வி​சா​ரணையை ஜூலை 22-ம்​ தேதிக்​குத் தள்​ளி வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT